எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இந்தக் குதிரைமரம்.
பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு. வாசக இடைவெளிகளுடன் அநேகமான கதைகள் இருப்பதால் ஆழ்ந்த வாசிப்பைக் கோருகின்றன. ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசிக்கும் போதே அவற்றின் உள்ளீடை அணுகமுடிகின்றது.
மனநலமருத்துவருக்கும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிக்கும் இடையிலான பூனை எலி விளையாட்டாக இருந்தது "தற்கொலை முகம்" என்ற கதை. உளவியல் அடிப்படையில் நோயாளியை அணுகும் மருத்துவர் எவ்வாறான மனச்சஞ்சலங்களுக்கு ஆளாகி தன்னிலை இழக்கும் தருணம் எதிர்பாராதது. தூக்கமின்மையின் காரணத்தை சுய மதிப்பீடு செய்யும் போது மனதின் கசப்பான பகுதியை உணர்வது என்ற முடிச்சில் கதை உச்சம் பெறுகிறது.
Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts
Friday, May 9, 2025
குதிரைமரம் வாசிப்பனுபவம் - ஆதவன் சரவணபவன்
Thursday, December 19, 2019
இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன் சிறுகதை வாசிப்பனுபவம்
உடை இருப்பிடத்திற்கு முன்னே உணவு என்னும் அடிப்படையான விஷயம் வந்துவிடுகிறது. ஒருவேளை உணவு என்பதே உலகத்தில் பலருக்கு மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. ஆனால் வேறோரு பக்கத்தில் உணவை வீணாக கீழே கொட்டுவது நடக்கிறது. பலஇல்லங்களில் உணவு ஒரு ஆடம்பரம் தான். உணவகங்களின் வழியே நாம் அளிக்கும் பணம் அந்த உணவிற்கு பலமடங்கு அதிகம் செலுத்துகிறோம். திருமணங்களில் பல உணவு வகைகள் ஆடம்பரத்திற்கே சேர்க்கப்படுகின்றன. பல உணவுவகைகள் சாப்பிடப்படாமல் வீணாவதுதான் அதிகம். அந்த கெளரவம் நமக்கு தேவையாக இருக்கிறது. உணவை எவ்வளவு வீணாக்குகிறாரோ அவ்வளவு வசதி படைத்தவராகிறார்கள். உணவை மற்றவர்களுக்கு அளிப்பதில் இருக்கும் இன்பம்கூட கெளரவத்தில் இணைந்துவிடுகிறது. உணவை பெறுபவர் அதை கீழ்மையாக நினைக்கவேண்டியவராகிறார்.
Friday, December 6, 2019
நாற்காலி - கி.ராஜநாராயணன் சிறுகதை வாசிப்பனுபவம்
நாற்காலிகள் அதிகாரத்திற்கானவை என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. சிம்மாசனம், செங்கோல், அரியணை, போன்றவைகள் இதைத்தான் குறிக்கின்றன. நிலப்பிரப்புத்துவ மனநிலையில் இதைச் சொல்லும்போதே குடையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பண்டைய மரபில் வெண்கொற்றக்குடையாக இருந்தது பின்னாலும் ஒருவருக்கு பிடிக்கப்படும் குடையாகவும், பிறகு தனக்கே பிடித்துக் கொள்ளும் குடையாகவும் ஆனது அதிகாரத்தின் படிநிலைகள். நிலப்பிரபுத்துவ வாழ்வில் செருப்பு அணிந்ததும் அதிகாரத்தின் குறியீடுதான்.
Thursday, November 28, 2019
நாயனம் - ஆ.மாதவன் சிறுகதை வாசிப்பனுபவம்
சலிப்பில்லாத வாழ்க்கையில்லை. எவ்வளவுதான் உயர் எண்ணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு வந்தேவிடுகிறது. வேண்டாத பொருள் கைவிட்டு போகும்போது அதுகுறித்து கவலை கொள்வதில்லை, அது நம்மைவிட்டு செல்கிறதே என்கிற மகிழ்ச்சி உண்மையில் அடைவதில்லை. மாறாக சலிப்பை அடிநாக்கின் கசப்பைபோல உணர்கிறோம். இதுநாள்வரை பொறுத்திருந்ததின் பொருளின்மைதான் உண்மையில் அப்படியான சலிப்பு தோன்றுவதற்கு காரணம் என்றால் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.
Sunday, November 10, 2019
புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன் சிறுகதை வாசிப்பனுபவம்
புற்றில் உறையும் பாம்பு எதிர்ப்பாராத வேகத்தில் திருப்பி தாக்கும். புற்றிற்குள் இறங்கும் பாம்பு தலை உள்ளேயும் வால் வெளியேயும் இருப்பதனால் அதை எளிதில் பிடித்துவிடலாம் என நினைத்து வாலைப் பிடிக்கும் சமயத்தில் புற்று வாயில் அதன் ஒளிந்திருக்கும் தலையை வெளியே எடுத்து பிடிப்பவரை தாக்கும். உண்மையில் பாம்பு வளைந்து அந்த இடத்தில் நின்று காத்திருக்கும். பொதுவாக பெண்களை பாம்புகளுடன் ஒப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெண்கள் உண்மையில் வேறுவகையானவர்கள். ஆண்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் எதிர் திசையில் செயல்படக்கூடியது. காமமும் அதன் மீதான பார்வைகளும் இருவருக்கும் பொதுவானதுதான் என்றாலும், வெளிப்பாடுகளில் இருக்கும் வேறுபாடு இருவரைப் பற்றி முற்றிலும் எதிர் திசையில் யோசிக்க வைக்கிறது.
Wednesday, October 30, 2019
ஒருநாள் கழிந்தது - புதுமைபித்தன் சிறுகதை வாசிப்பனுபவம்
அரைநாள் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். கதையில் அரைநாள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் மாலையிலிருந்து இரவுவரை தான் கதை. காலை, மதியம், நடுஇரவெல்லாம் முருகதாசர் என்ன செய்தார் என்கிற குறிப்பு எதுவும் இல்லை இதில். இப்படி புறவயமாக கதையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும் புதுமைபித்தனின் நிஜகதையை ஒட்டியிருப்பதால் அவர் வாழ்க்கையை படிக்கின்ற சுவாரஸ்யம். பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் பகுதியில் இக்கதை இருக்கிறது. அன்றிலிருந்து பல சமயங்களில் இக்கதையை வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அதில் இருக்கும் இரு கதைகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன். ஒன்று இது மற்றொன்று ஜெயகாந்தன் எழுதிய நந்தவனதில் ஒரு ஆண்டி.
Friday, October 18, 2019
அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன் சிறுகதை வாசிப்பனுபவம்
எளிய மனிதவாழ்வில் நடக்கும் கனமான சம்பவங்கள் பேய்க்காற்றில் அறுந்து நொடியில் வானத்து பரப்பிலிருந்து காணாமல் போய்விடும் பட்டம் போன்றது. ஆனால் அதன் நினைவுகள் முகத்து வடுக்கள் போல நம் மனதிலிருந்து நீங்குவதேயில்லை. அசோகமித்திரன் எழுதிய கதைகளில் இம்மாதிரியான பொதுத்தன்மை ஒன்றுண்டு. மிக எளிய மக்களின் அன்றாட பிரச்சனைகளை கொண்ட கதைகள் என்கிற பிம்பத்திற்கு பின்னால்,
தினசரி வறுமையும், தோல்வி பற்றிய சித்திரமும், கைவிடப்பட்ட நிலையையும் எவ்வித உணர்ச்சிகரமான
எதிர்வினைகளற்று சொல்லப்பட்டிருக்கும். உணர்ச்சிகரமற்ற என்பதை இங்கு அழுத்திச் சொல்லவேண்டும். ஏனெனில் உத்வேகத்துடன் சொல்லப்படுதலை, உச்சஸ்தாதியில் குரலெடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து, அப்படியானவைகளைகூட சாதாரண சம்பவங்களோடு பிணைத்து மனிதர்கள் இவ்வளவுதான் என்று சொல்லிவிடுபவர் அசோகமித்திரன். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால் அதே அன்றாடப் பிரச்சனைகளை மெல்லிய நகைச்சுவை பின்ன சொல்லிவிடுவதில் இருக்கும் அழகு அசோகமித்திரனின் முத்திரை என்று சொல்லலாம்.
Wednesday, September 11, 2019
சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - தி.ஜானகிராமன் சிறுகதை வாசிப்பனுபவம்
தி.ஜானகிராமன் எழுத்துக்களில் இருக்கும் உரையாடல்தன்மை வாசகனை கட்டிபோட்டுவிடக்கூடியது. அவைகள் பேசிப்பேசியே காலத்தை கொண்டாட நினைக்கும் மனிதனின் வார்த்தைகள் என்பதால் இருக்கலாம். இடையூராது சளசளத்து ஓடும் நீர் போன்ற வார்த்தைகள். தோல்வியை மறைக்கும் லாவகமும், வெற்றியை ருசித்தேயிராத வரண்ட வண்டல்மண் போன்ற மனித புலம்பல்கள். அவர் எழுதிய கதைகளில் சிறந்த கதைகளாக பாயாசம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான், அக்பர் சாஸ்திரி, பிடிகரணை போன்றவைகளைச் சொல்லலாம். அவர் எழுதியவைகளில் அதிகம் பேசப்படாத சில கதைகளும் உண்டு. நுண்வாசிப்பில் மட்டுமே புரிந்துக் கொள்ளகூடியவையாகவும், ஆழ்மன மெளனங்களை வெளிப்படுபவையாகவும் இருக்கும் கதைகள் சில உண்டு. பசி ஆறிற்று, காண்டாமணி, சாப்பாடு போட்டு 40 ரூபாய் போன்ற கதைகள்.
Monday, August 5, 2019
கலங்கிய நதி வாசிப்பனுபவம்
தில்லியில் இருந்த சமயங்களில் அறிந்த ஒன்று அங்குவாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தில்லிவாழ் மக்கள் எப்போதும்
பொருட்படுத்தி அவர்களை மதித்து அவர்களுடன் இணக்கமாக மற்ற மக்களிடம் இருப்பது போல் இருந்ததில்லை
என்பதுதான். அதாவது அவர்கள் இரண்டாம்தர மனிதர்களாகத்தான் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அகதிபோல் வாழ்வது ஒரு காரணம். அவர்கள் வாழ்ந்த இடம் மிக மோசமானதாக சூழல் தொடரும் இடமாக இன்றும் இருக்கிறது.
Monday, June 11, 2018
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் வாசிப்பனுபவம்
தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்புகளுக்காக
அதிகம் பேசப்பட்டவரும், தன் கட்டுரைகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படவரும், தன் சார்பு
கட்சி, அரசியலில் முயற்சிகளுக்கா அதிகம் கேலிக்குள்ளானவரும், தன் தனிப்பட்ட ஆசாபாங்களை
பொதுவில் வெளியிட்டதினால் அதிகம் வசைபாடப்பட்டவரும் என ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தனாக
தான் இருக்கும்.ஆனால் அவரது நாவல்கள் வெகுஜன உலகில்
கொண்டாடப்பட்ட அளவில் நவீன இலக்கிய உலகில் கொண்டாடப்படவில்லை. உரத்து ஒலிக்கும் குரல்
அவரது படைப்பில் ஒலிக்கிறது என்கிற காரணம் முன்னிறுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார். உண்மையில் அவரது கதைகள் உரத்து
ஒலித்ததா? உரத்து ஒலித்த காரணத்தால் அவரது படைப்புகள் முற்றிலும் நிராகரிக்கபடவேண்டுமா?
நவீன தமிழ் உலகை அவரது படைப்புகள் ஒரு சதவிகிதம்கூட முன்னோக்கி கொண்டு செல்லவில்லையா?
என்கிற பல்வேறு கேள்விகள் இன்று நாம் கேட்டுக் கொள்ளவேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)






