நாற்காலிகள் அதிகாரத்திற்கானவை என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. சிம்மாசனம், செங்கோல், அரியணை, போன்றவைகள் இதைத்தான் குறிக்கின்றன. நிலப்பிரப்புத்துவ மனநிலையில் இதைச் சொல்லும்போதே குடையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பண்டைய மரபில் வெண்கொற்றக்குடையாக இருந்தது பின்னாலும் ஒருவருக்கு பிடிக்கப்படும் குடையாகவும், பிறகு தனக்கே பிடித்துக் கொள்ளும் குடையாகவும் ஆனது அதிகாரத்தின் படிநிலைகள். நிலப்பிரபுத்துவ வாழ்வில் செருப்பு அணிந்ததும் அதிகாரத்தின் குறியீடுதான்.
