Showing posts with label ஆதவன் சரவணபவன். Show all posts
Showing posts with label ஆதவன் சரவணபவன். Show all posts

Friday, May 9, 2025

குதிரைமரம் வாசிப்பனுபவம் - ஆதவன் சரவணபவன்

எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இந்தக் குதிரைமரம்.

பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு. வாசக இடைவெளிகளுடன் அநேகமான கதைகள் இருப்பதால் ஆழ்ந்த வாசிப்பைக் கோருகின்றன. ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசிக்கும் போதே அவற்றின் உள்ளீடை அணுகமுடிகின்றது.

மனநலமருத்துவருக்கும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிக்கும் இடையிலான பூனை எலி விளையாட்டாக இருந்தது "தற்கொலை முகம்" என்ற கதை. உளவியல் அடிப்படையில் நோயாளியை அணுகும் மருத்துவர் எவ்வாறான மனச்சஞ்சலங்களுக்கு ஆளாகி தன்னிலை இழக்கும் தருணம் எதிர்பாராதது. தூக்கமின்மையின் காரணத்தை சுய மதிப்பீடு செய்யும் போது மனதின் கசப்பான பகுதியை உணர்வது என்ற முடிச்சில் கதை உச்சம் பெறுகிறது.