ஒவ்வொரு சமூகமும் தன்னை புதுப்பித்துக் கொள்ள கலை இலக்கியங்களின் மீதான நமது பேரார்வம் மிக முக்கியமானது. கலை இலக்கியங்கள் என்பவை பணம் சம்பாதிக்கும் ஆர்வத்திற்கு எதிரானது என கருதப்படுகிறது. சமூக சூழலில் எப்போதும் பணம் ஒரு பிரதானமான சேர்க்கை நோக்கம்.
கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் மது, மங்கை என்று கெட்டுப் போகிறவர்கள் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்களை உதாரணமாக சொல்வார்கள். குடித்துச் செத்தவர்கள் அல்லது பெண்களின் பின்னே அலைபவர்கள் என்று சொல்லகேட்கலாம். உண்மையில் சினிமா, கலையின் முக்கிய வடிவம் அல்ல என்று பலருக்கு தெரிவதில்லை.





