Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, January 5, 2016

ஓராண்டு முடிவில்




முன்பே இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் 2015 ஜனவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுவது என்கிற கொள்கையை எடுக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எழுதுவது என்பது திட்டம். ஆனால் அப்படி முழுமையாக நடைபெறவில்லை என்றாலும் 135 போஸ்ட்கள் எழுதியிருக்கிறேன். சனி, ஞாயிறு தவிர தினம் ஒன்று என்று வைத்தால் சராசரியாக 250 எழுதியிருக்க வேண்டும். அதனினும் பாதியாக எழுதியிருந்தாலும் திருப்தியாக இருந்தது. எழுதும் ஒவ்வொரு நாளும் ஒரு மனநிறைவை அடைந்தேன். முகம் தெரியா ஒரு மனிதருக்கு செய்த உதவியால் அடைந்த மகிழ்ச்சி போல நிறைவாக இருந்தது அந்த நாள்.
சில நாட்களில் எழுத முடியாமல் போனதற்கு தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு கொண்டதால்தான். ஒரே மாதிரியான உள்ளடக்கம் இருக்கும்போது தினமும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எனக்கு நானே அரசியல், குடும்பம், இலக்கியம், சினிமா என்று ஒவ்வொரு புது பகுதியிலிருந்து எழுதவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

Tuesday, December 15, 2015

பீப்குள்ள என்ன இருக்கு?



சில ஆண்டுகளுக்கு முன்னால் சமஞ்சது எப்படி என்று ஒரு சினிமா பாடல் வெளிவந்தது. எப்படி எப்படி சமஞ்சது எப்படி என்கிற பாடல் மிக பிரபல்யமாக, பெண்களை பார்த்து கிண்டலடிக்கும் பாடலாக இருந்தது. சமஞ்சதை பீப் வைத்துதான் படத்தில் வெளியிட்டார்கள். ஆனால் வெளியே பாடல் கேட்கும்போது பீப் இருக்காது. அதற்கும் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் சென்றால் மற்றொரு பாடல் அப்படி இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடல் வேண்டுமென்றே கவனதை கவர இயற்றப்படுகிறது என நினைக்கிறேன். இந்த சிம்பு அனிருத் செய்திருக்கும் இந்த பாடல் சற்று வித்தியாசமானது. துணிச்சலாக இன்னும் நேரடியாக வார்த்தை வரும்படி பாடல் அமைந்திருக்கிறது. பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தனி மனிதர்கள் பொதுநலவிரும்பிகள் என்று எல்லோரும் இதை வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இது அது காலத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் சிலர் தூற்றவும் செய்யலாம்.

Friday, December 11, 2015

நவீனத்தை கொண்டுவந்த‌ விளம்பரங்கள்



தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் நாம் அதிகம் பார்த்த‌ விளம்பரங்கள் நிர்மா, சாரிடான், அனாசின், விக்ஸ், கோல்கேட், 501, டெட், ஜீவன்டோன் போன்றவைகள் தான் இருக்கும். இவைகளை தாண்டி வேறு விளம்பரங்களை கவனித்து ஒருவர் தம் மனதில் நிறுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் வித்தியாசமான ஆள் தான். அவருக்கு விளம்பரங்களின் மீது தனியாத ஆர்வமும், தொடர்ந்து நாட்டு நடப்புகளை கவனிப்பவருமாக இருப்பார் என நினைக்கிறேன்.
எந்த திரையரங்கிலும் சினிமாவிற்கு முன் காட்டபடும் ஆரம்ப விளம்பர பகுதிகளில் இந்த விளம்பரங்கள் இருக்கும். இவற்றில் சில விளம்பரங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 70-80களில் இவைகளை வாங்க வைக்க இதன் நிறுவனங்கல் மிக சிரமபட்டன. பெரிய போட்டிகள் இல்லாத காலங்களில் இவைகளை வாங்க மக்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். அப்போது மக்களுக்கு தேவையானவைகள் அவர்கள் இருக்கும் இடங்களியே கிடைத்துவந்தன. சோப்பிற்கு சவுக்காரம் கட்டி, பேஸ்டுக்கு பற்பொடி, தலைவலிக்கு சுக்கு கஷாயம் என்று அனைத்துமே கிடைத்த‌ன. ஆகவே மக்களுக்கு இவைகளைத் தாண்டி காசு கொடுத்து (அல்லது அதிக காசு கொடுத்து) வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

Sunday, November 22, 2015

பட்டிமன்றம்


விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியில் முக்கியமாக பார்க்கப்படுவது பட்டிமன்றம்தான். மற்ற நாட்களில் இந்த பட்டிமன்றம் நினைத்துப் பார்க்கபடுவதில்லை.. மற்ற நாட்களில் ஒளிப்பரப்பினாலும் பார்க்கமாட்டார்கள். ஏன் விடுமுறை நாட்களில் மட்டும் பட்டிமன்றம் பார்க்கப்படவேண்டும்? மற்ற நாட்களில் ஒளிபரப்பானால் அவைகளுக்கு பெரிய மரியாதை இல்லை. இன்றைக்கு பட்டிமன்றம் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அதிலிருந்து வரும் எந்த கருத்துகளுக்கு அவர்களுக்கு தேவையாக இல்லை. விடுமுறைநாட்களில் சிரித்து மகிழ்ந்திட ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாக மற்ற கமெடி நிகழ்ச்சிகளைவிட சிறந்த காமெடிக்கு இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அன்றைய தினம் குடும்பத்தோடு சிரித்து அன்றைக்கே மறந்துவிட ஒரு காமெடி நிகழ்ச்சியாக இன்று மாறிவிட்டது.
முந்தைய நாட்களில் கோவில் திருவிழா, கிராம விழா, தெருமுனை, பள்ளிகளில், கல்லூரிகளில் என்று ஒவ்வொரு முக்கியமான சமயங்களிலும் பட்டிமன்றங்கள் இருந்தன. ஒருவகையில் நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். தமிழகத்தில் நடந்த இந்தபட்டிமன்றங்களைப் போல மற்ற பகுதிகளில் நடந்ததில்லை. உண்மையில் டிவியில் காட்டப்படும் பட்டிமன்றம்விட ஒரிஜினம் பட்டிமன்றத்தை முற்றிலும் வேறானது. பழைய பட்டிமன்றங்களில் பேசப்படும் கருத்துக்கள் சிறந்த பேச்சாளர்களால் பேசப்பட்டு அதற்கென்று உருவாகியிருந்த மக்கள் கூட்டத்தால் ரசிக்கப்பட்டவைகள்.

Thursday, November 19, 2015

நாத்தீகம் vs. ஆத்தீகம்



நாத்தீகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த மேதைகளாகவும், மிகுந்த நம்பிக்கைவாதியாகவும் நினைப்பதும், ஆத்திகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த பழமைவாதியாகவும், அசமஞ்சமாகவும் பயந்த சுபாவம் உடையவனாகவும் நினைப்பதும் நம் எல்லோரிடமும் இருக்கிறது.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் படித்த ஒருவர் மீகத்தீவிரமான நாத்தீக நிலைப்பாட்டை கொண்டிருந்தார். பொதுவாக கல்லூரி காலங்களில் கடவுள் மறுப்புகொள்கையில் தீவிரமாக இருந்திருப்போம்தான். நானும் அப்படியானவனாக இருந்தேன். ஆனால் அந்த நண்பர் நிஜமாகவே தீவிரமான எதிர்நிலையும், அது குறித்த தெளிவான பார்வையும், அதற்கு தேவையான‌ புத்தகங்களும் படித்திருந்தார். பெரியார் ஈவேராவின் ஓரிரண்டு புத்தகங்கள் அவரிடம் இருக்கும். தீவிரமான முகத்தோடும் மனநிலையோடும் காணப்படுவார். எந்நேரமும் கல்லூரியின் பாட‌புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். எந்த விஷயத்திற்கு அவருக்கென்று ஒரு பார்வை இருக்கும். அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் அது மாறாத தன்மையுடன் இருக்கும். எந்த விஷயத்தை குறித்தும் அவரிடம் பேசவோ விவாதிக்கவோ முடியாது அவருடன் பேசிய ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குபின் இது புரிந்துவிடும். அதை மிகதாமதமாகத்தான் புரிந்துக்கொள்ளமுடிந்தது. முன்பே ஒரு விஷயம் குறித்த‌ அதன் நிலைப்பாட்டை எடுத்திருப்பார். அத்தோடு அவருடன் விவாதிப்பதும் வீணாதாகவும், ஒரு கொடுக்கல் வாங்கலாக ஒரு நட்புமுறை முறையில் அல்லாமலும் இருக்கும்.

Wednesday, November 18, 2015

அரசியல் தெளிவு



தமிழக இந்திய அரசியலை கொஞ்சம் உற்று கவனித்தாலே மண்டை வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது. பல வருடங்களாக பல்வேறு தலைவர்களை சந்தித்திருக்கும் பல அன்பர்களையும் அவர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போது ஒன்றை வெளிப்படையாகவே அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது 'இந்தியாவில் நடக்கும் அரசியல் என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை' என்று கூறுவதுதான். நேரடியாக இதை சொல்லவேண்டும் என்று இல்லை, பல சமயங்களில் மறைமுகமாகவும், நாசூக்காவும் சொல்லியிருப்பார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் அவர்கள் அந்த அரசியலில் நல்ல பிழைப்பை நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

Tuesday, October 13, 2015

உறக்கம் எப்படி இருக்க வேண்டும்

எனக்கு ஒரு நண்பர் இருந்தார், அவருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருப்பதாக எப்போது சொல்லிக் கொண்டிருப்பார். நான் தூங்கும்போது என் அறைக்கு வந்து சில டிப்ஸ்களை கேட்டுச் செல்வார். நான் நன்றாக தூங்குவதாகவும் எந்த பிரச்சனையும் இன்றி ஆழ்ந்த உறக்கம் கொள்வதாகவும் பொறாமைகூட‌ படுவார். அப்போது ஒரு சின்ன வேலையில் இருந்தேன். என் அறைக்கு பக்கத்தில் வேலைத் தேடிக்கொண்டிருந்த அவர் இருக்கும் அறை இருந்தது. மாலை ஆறு மணிக்கு டீ அருந்துவதை நிறுத்த சொன்னேன். இன்னிக்கு பரவாயில்லை கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அடுத்த நாள் வரும்போது கால்களை நனைத்துவிட்டு தூங்க சொன்னேன். இன்னிக்கும் கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். சாப்பாட்டை முன்பே முடிக்க சொன்னேன். அதையும் செய்து கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அவர் விரும்புவது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை. ஒரு நாள் வந்தபோது உங்கள் தினப்படி வேலைகளை கூறுங்கள் என்றேன். காலையில் எழுந்தது டீ, பின் பத்திரிக்கை படித்தல், பின் சிற்றூண்டி, படித்த பத்திரிக்கையிலிருந்து அழைத்திருந்த வேலைக்கு செல்லுதல் பின் மதியம் உணவு பின் அறைவந்து ஒரு தூக்கம் போடுவது என்றார். அதற்குபின்? அதற்கு பின் எங்கே செல்வது அப்போதே மாலை வந்துவிடும் வெளியே செல்லமுடியாது என்றார். விளையாட்டாக சொன்னாரா சீரியசாக சொன்னாரா தெரியவில்லை ஆனால் மதியம் நான்கு மணிநேரம் தூங்கும் ஒருவர் எப்படி இரவில் தூக்கமுடியும் என யோசிக்கவில்லை.

Tuesday, September 22, 2015

போலீஸ் வேலை

சின்ன குழந்தைகளுக்கு பெரியவனாக/ளாக எப்போது ஆகப்போகிறேன் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும். நான் எப்போது பெரியவனாக ஆவேன் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது ஒரு முதிராத வார்த்தைதான். நமக்கு தெரியும் வளரும் போது வளர்ந்தே தீருவார்கள் என்று. நீ பெரியவனானதும் என்ன ஆவ போற என்று கேட்கப்படுகிற கேள்விக்கு ஒரு குழுவின் இரண்டு குழந்தையாவது போலீஸ் ஆகப்போறேன் என்பதாக இருக்கும்.

போலீஸ் ஆவது மிகப்பெரிய வேலைதான். சமூகத்தில் அதற்கு முக்கிய அந்தஸ்து ஒன்று இருக்கதான் செய்கிறது. நேர்மையான போலீஸ் என்கிற சித்திரம் எல்லோரையும் உதாரண புருஷர்களாக தங்களை ஆக்கிக்கொள்ளும் ஒரு பெரிய வடிவம்தான். ஆனால் நிஜத்தில் அப்படி போலீஸ் ஆவதும், நேர்மையாக போலீஸ் அதிகாரி என்று பெயர் பெறுவதும், போலீஸாக மற்றவர்களோடு உறவாடுவதும்கூட எளிதான காரியம் அல்ல. எங்கோ நடந்த பல்வேறு சம்பவங்கள் நம்மை போலீஸிலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா என்கிற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் வரைக்கு அதற்கு உதாரணம் காட்டமுடியும்.

Sunday, September 20, 2015

நாய்கள்

சிறுவர்களுக்கு பொதுவாக நாய்களை பிடிக்காது, நாய்களுக்கு சிறுவர்களை அதிகம் பிடிக்கும் என்பதை கவனித்திருக்கிறேன்., எளிதாக அவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான உணவுகளைப் பிடுங்கிவிடமுடியும் என்பது ஒரு காரணம். தனியாக சிறுவர்கள் எதையாவது கடையிலிருந்து வாங்கிவரும் போது அவர்களை வழியில் மடக்கி முகர்ந்து பார்க்க பயந்து போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள், அதனால் நாய்களுக்கு எளிதாக தின்ன எதுவும் கிடைத்துவிடுகின்றன. பெரிய நபர்களைவிட சின்ன சிறுவர்களை எளிதாக விரட்ட முடியும் நாய்களால்.
 
நான் சிறுவனாக இருந்தபோது என் மாமாவீட்டிற்கு தனியாக செல்ல அங்கு இருந்த அவர்கள் வீட்டு நாய் அன்னியன் என என் மேலே பாய்ந்துவிட்டது. கடிக்க வில்லை, அதுவே நாய்கள் மீது எனக்கு சிறுவயதுமுதல் வெறுப்புவர காரணமாக இருந்துவிட்டது. நாய்களை வைத்திருக்கும் மனிதர்களை, அவர்கள் வெளியே அவைகளை நடத்திச் செல்வதை பலசமயம் கண்டு வெறுப்புடன் நண்பர்களாக அவர்களுடன் பேசாமல் சென்றிருக்கிறேன்.

Wednesday, September 16, 2015

வாகனம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இன்றைய தேதியில் பைக் வைத்திருப்பது ஒரு கெளரவமான விஷயமாக கொள்ளப்படுவதில்லை என்றார். அப்போது உண்மையில்லை என்று தோன்றியது. சில வருடங்களிலேயே பல்வேறு மாடல்கள் வந்து பைக் என்பது சாதாரண ஒரு நுகர்வுப் பொருளாக மாறி எல்லோர் கையில் இருந்தது. ஒரு புதுமாப்பிள்ளைக்கு பைக் வாங்கும் வரதட்சனை பந்தாக்கள் பெரிய கவனிப்புகளுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு மாமாவிடம் ஒரு டிவிஎஸ் வண்டி இருந்தது.
அதை அவர் தினம் காலையில் துடைப்பதும், அந்த வழிய எடுத்துச் செல்ல குளத்திலிருந்து கலிமண்ணை எடுத்துவந்து கொட்டி கெட்டி படுத்தியிருந்தார். மழைகாலத்தில் சாதாரண மணலை போட்டால் கரைந்து ஓடிவிடும் என்பது அவரது எண்ணம். அந்த நேரம் அந்த தெருவில் இருந்தவர்களிடம் சைக்கிள் தான் இருந்தது. என் அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதை ஓட்டவே அவருக்கு சிரமாக இருந்தது. ஆனால் புல்லட், லம்படார் போன்ற கனமான வண்டிகளை வைத்திருந்தவர்கள் பரம்பரை வண்டி ஓட்டிகளாகவோ அல்லது பெரிய பலசாலியாக அல்லது வைத்திருக்கும் பணத்தை பந்தாவிற்கே செலவழிக்கும் ஒரு வகையினர் மட்டுமே வைத்திருந்தனர்.

Monday, August 31, 2015

விபத்து

இன்றுகாலை ஒகேனகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் இறந்த செய்தியை படித்துவிட்டு அலுவலகம் வந்துக் கொண்டிருந்த வழியில் சற்று நேரத்திற்கு முன்னால்தான் மூன்று சக்கர மினிடெம்போ லாரியும் ஒரு மோட்டார் பைக்கு மோதிக்கொண்டிருந்தன லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை வைத்து பார்க்க என்ன நடந்தது என்பதை கணிக்க முடிந்தது. மினிடெம்போவிற்கு பெரிய சேதம் இல்லை. அதன் டூல்பாக் மட்டும் லேசாக ந‌சுங்கி இருந்தது. ஆனால் பைக்கில் முன்சக்கரம் இரண்டாக மடிந்துவிட்டது, அதில் வந்தவருக்கு ஊமைஅடி. லேசாக அழுது கொண்டிருந்தவரை ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள்.
விபத்துகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நம் கவனத்திற்கு வந்து கொண்டேதான் இருக்கின்றன. சில நம் கவனத்திற்கு வராததற்கு காரணம், அது அத்தனை கொடூரம் இல்லாததாக இருக்கும். கொடூரங்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. கொடூரமான காட்சிகளை டிவியில் பார்ப்பதும், சாலை விபத்துகளின் தொகுப்புகளை யூடியூபில் பார்ப்பதும் நம் மனதில் உள்ள கொடூர ஆசைகளை திருப்திபடுத்ததான்.

Wednesday, August 19, 2015

கீழே நிற்கும் மனிதர்கள்

நம்மிலும் குறைந்த நிலையில் உள்ள மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து நாம் எந்த மாதிரியான குணமுடையவர் என்பதை காட்டிக் கொடுத்துவிடும் என்பார்கள். பொருளாதார நிலையில் நம்மைவிட குறைந்தவர்கள், நம்மைவிட குறைந்த பதவியில் உள்ளவர்கள், நம்மைவிட விலை குறைந்த உடைகளை அணிபவர்கள், நம்மைவிட கறுப்பானவர்கள், நம் சாதியைவிட குறைந்த படிநிலையிலுள்ள‌ சாதியை உடைவர்கள் என்று பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருப்போம், அவர்களை நாம் எப்போது ஒரு மாற்று குறைந்தவர்களாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோமோ அல்லது அப்படி நிஜமாகவே நடிக்கிறோமா என்பதை சொல்லமுடியாது. அதே எல்லாவகையான மேல்படியில் உள்ளவர்களை சந்திக்கும்போது மனதில் வைது கொண்டிருப்பதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஒரு பெரிய நிகழ்வு ஒன்று, இந்த சூழலுக்கு எதிரான அதாவது நம் சமூகம் அது குறித்து முன்பே கட்டமைத்து வைத்திருக்கும் ஒன்றிற்கு எதிராக, நடக்கும் போது நாம் சர்வநிச்சயமாக செய்வது 'இது மாதிரி உலகத்துல இன்னும் நடந்துகிட்டுதான் இருக்குதா, என்ன உலகம் இது' என்பதாகத்தான் இருக்கும்.

Monday, February 2, 2015

ஒருமாத முடிவில்


வருடம் தொடங்கி ஒரு மாதம் அதற்குள் கடந்துவிட்டது. அத்தோடு நான் ப்ளாக்கில் எழுத தொடங்கியும் ஒரு மாதம் முடிந்துவிட்டது. சனி, ஞாயிறுகளைத் தவிர மற்ற நாட்களில் எழுதியிருக்கிறேன். இணையம் பெரிய அளவில் பயிற்சிக்கு இடம் அளிக்கிறது நமக்கு. இணையத்தில் எழுதுவதால் தொடர்ச்சியாக படிக்கிறார்கள். இது பத்திரிக்கையில், தினச‌ரி பேப்பரில்கூட சாத்தியமே இல்லை. சராசரியாக 50 பேர் தொடர்ந்து படித்துவருகிறார்கள். தனி மெயிலில் உள்டப்பியில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். இது உடனுக்குடன் நடக்கிறது. இதுவும் நிச்சயம் அச்சு இதழில் சாத்தியமில்லை.
ஒரு மாதத்தை முழுவதும் எழுதி நிறைவு செய்வேன் என நான் நினைக்கவில்லை. சில கட்டுரைகள் இரண்டு நாள் முந்தி எழுதியது ஆனால் பல கட்டுரைகள் அன்று காலை வந்துதான் எழுதியுள்ளேன். எழுதுவதால் ஏற்படும் நிறைவை எழுத்தில் நிச்சயம் சொல்லமுடியாது. அந்த மனநிறைவு அன்றைய நாள் முழுவதும் தொடர்வதும் அடுத்தநாள் எழுத வேண்டியவைகளை நினைக்கவும் ஆரம்பித்துவிடுகிறது.

Thursday, January 22, 2015

சினிமாவும் குடியும்

தமிழகத்தில் மிக முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு என்றால் அது சினிமாதான். ஒவ்வொரு வெள்ளியும் சினிமா வெளியானாலும் வருடத்திற்கு 200க்கு மேற்ப்பட்ட சினிமாக்கள் வந்தாலும் தமிழ‌கத்தில் சினிமா மீதான மோகம் குறைய செய்யாது. சினிமா தவிர வேறு எந்த பொழுதுபோக்குகளும் தமிழ் மக்களுக்கு கிடையாது. கலைகளுக்கு தொடர்புடைய வாசிப்பு, இலக்கியம், புராணம், நாடகம், போன்ற எதுவும் நமக்கு கிடையாது. அப்படி இருந்தவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக கவனிப்பாரற்று காணமல் போய்விட்டது. பட்டிமன்றம் என்ற வகை மட்டும் கொஞ்சம் உயிரோடு இருக்கிறது. அதுகூட ஆழ்ந்த கலைவெளிப்பாடாக இல்லாமல் தினசரி பிரச்சனைகளை பேசுகின்ற அல்லது சினிமாவையே அடியொற்றி (சினிமா பாடல்கள், காட்சிகள் பற்றி) பேசுவதாகவே இருக்கிறது.

Thursday, January 15, 2015

கிராமம்-நகரம்-கிராமம்



முன்பு பழைய சினிமாக்களில் நாயகன் கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்திற்கு செல்லும் முதல் காட்சியுடன் படம் ஆரம்பிக்கும். அதற்குபின் டைட்டில்கள் வரும் அந்த அளவிற்கு அடுத்து என்ன என்கிற சஸ்பென்ஸை உருவாக்குகிறார்கள். இது எல்லா இந்திய மொழி திரைப்படங்களிலும் காணலாம். அந்த சம‌யங்களில் நகரம் மிக செலவு ஏறியதாக இருந்தது. இன்றும் நகரம் செலவேறிய விஷயம்தான் ஆனால் அதற்கு தகுந்தாற்போல் வரவு வரகூடிய இடமும் இன்று நகரம்தான். முன்பு பஞ்சத்திற்காக நகரத்திற்கு வந்துகொண்டிருந்தார்கள் இன்று வேலைக்காக வந்து கொண்டிருந்தவர்கள் மீண்டும் பஞ்சத்திற்காக வர தொடங்கியிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி.

Wednesday, January 14, 2015

பெருமாள் முருகனின் சரணாகதி



 
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை அதில் சொல்லப்பட்ட ஒரு பகுதிக்காக‌ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டி, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மன்னிப்பு கேட்கவைத்து, என்று பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு புத்தகம் திரும்ப பெற்றுக்கொள்வதாக அதில் உள்ள திருச்செங்கோடு என்று ஊரின் பெயரை நீக்குவதாக, இனிமேல் எழுதப்போவதில்லை என்றும் கூறவைத்திருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளருக்கு மட்டும் பெரிய இழப்பு அல்ல இந்த சமூகத்திற்கும்தான். இந்த ஒரு விஷயம் கேரளாவிலோ கர்நாடகாவிலோ நடந்திருக்காது என நினைக்கிறேன். பஷீர் இறந்தபோது முதல் பக்கம் முழுவதும் செய்தி வந்ததாக கூறுவார்கள். அனந்தமூர்த்தி இறந்தபோது அப்படி கர்நாடகாவில் நடந்து நாமே பார்த்தோம். தமிழகத்தில் பழமையான மொழி, தொன்மையான மொழி, தனிபெரும் மொழி என்று கூறிக்கொள்ளும் நாம் இன்னும் மொழி, இலக்கியம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பதும், நம்மைவிட சகிப்பு தம்மையுடன் அவர்கள் செயல்படுவது நாம் இன்னும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெரிவித்துவிடுகிறது.



Tuesday, January 13, 2015

இன்றைய காமம்



நான் பள்ளியில் படித்தபோது சக‌பெண் பிள்ளையை கிண்டல் அடித்தார்கள் என்பதற்காக அந்த பெண்ணின் மாமா எங்கள் வகுப்பறைக்கு வந்து அந்த இரண்டு சிறுவர்களையும் ரத்தம்வர‌ அடித்து நொறுக்கி மிரட்டிவிட்டு சென்றார். அந்த நேரம் மதிய உணவு இடைவெளி நேரம். ஆகவே அவர் வந்தது யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தபின் பள்ளியில் ஆசிரியர்களிடையே பெரிய விவாதமாக ஆகிவிட்டது. எப்படி ஒருவர் உள்ளே வந்து அடிக்கலாம் என்று. அந்த சிறுவர்கள் வறிய ஏழ்மை குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தது நான்காம் வகுப்பு.

Monday, January 12, 2015

மதக்குறியும் குலக்குறியும்




நான் தில்லியில் இருந்தபோது சார்ச்டர்ட் பஸ் எனப்படும் தனியார் பேருந்துகள் வரும். எங்கு எறி இறங்கினாலும் ஒரே கட்டணம்தான். எல்லாம் ஒரு இடத்தை நோக்கி செல்பவைதாம். ஆறு ரூபாய் இருந்தது. சரியான சில்லறையுடன் ஏறவேண்டியிருக்கும். சில கேரள உரிமையாளர்களின் பேருந்துகளும் தினம் வரும். அதன் பெயர்களைக் கொண்டு அதை புரிந்து கொள்ளலாம். கைரளி, ஐயப்பன் போன்ற பெயர்களாக இருக்கும். சில கேரள பெண்களும், ஆண்களும் நான் ஏறும் இடத்தில் ஏறுவார்கள். அவர்கள் இந்த பெயர்களைக் கொண்ட வண்டியில் மட்டுமே ஏறுவார்கள். இதில் ஆச்சரியம் இல்லைதான். மலையாளிகள் மலையாளிகளைதான் ஆதரிப்பார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அந்த வண்டியில் அவர்களுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே அதன் நடத்துனர் வாங்கிக் கொள்வார். பத்து ரூபாய் அவர்கள் கொடுத்தாலும் 5 ரூபாய் திருப்பி அளித்துவிடுவார். அவர்களின் இந்த செயல் கொஞ்சம் சீண்டுவதாகவே இருந்தது. நிறைய கேரள உரிமையாளர்கள் வண்டிகள் வருவதால் எந்த வண்டி எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்ளமுடியாது. எல்லா வண்டியிலும் இதைத்தான் செய்தார்கள் வேறு உரிமையாளர் வேறு நடத்துனர். அந்த மக்களை நடத்துனர் எப்படி கண்டுகொள்கிறார் என்பதும் புரியவில்லை. ஏனெனில் பொதுஇடங்களில் அவர்கள் இந்தியில் மட்டுமே பேசுவார்கள்.
கொஞ்சநாளில் சின்ன அடையாளங்கள் அவர்களிடையே இருப்பதை புரிந்து கொண்டேன். நெற்றியில் சந்தனப் பொட்டு, மலையாளம் கலந்த இந்தி உச்சரிப்பு, ஆண்களில் மெல்லிய தாடி, பெண்களில் விரிந்த தலைமுடி. மெல்லிய தாடி என்னால் வைத்துக் கொள்ளமுடியவில்லை அத்தோடு மலையாளம் கலந்துஅல்ல, இந்தியே தடுமாறிக் கொண்டுதான் இருந்தேன். சந்தனபொட்டு எளிதானதாக தோன்றியது.

Wednesday, January 7, 2015

பெண்வாகனஓட்டிகளும் தொழிற்நுட்பமும்



இந்திய சமூகத்தில் பெண்கள் பலகாலம் வீட்டிலே அடைப்பட்டிருந்து சமீபகாலமாகத்தான் வெளியே வரஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மிகச் சமீபமாகத்தான் வாகனங்களை ஓட்டவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த மனநிலையை இன்று நாம் புரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போதிலேயே, என் சகவயது பெண்கள் சைக்கிள் ஓட்டவரும்போது பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சரியல்ல என்று கூறப்பட்டது. மீறி ஓட்டுபவர்களை சிறுவர்களும் பெரியவர்களுமாக கேலி செய்திருக்கிறார்கள்.
இன்று எல்லாவகை இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை பெண்கள் ஓட்டுகிறார்கள். முன்பு ஒரு பெண் வேலைக்கு அல்லது கல்லூரி செல்ல அண்ணனோ அப்பாவோ கூடவந்து சைக்கிளில் அல்லது மொபெட்டில் அழைத்து செல்ல‌ வேண்டும். இன்று அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எங்கு செல்லவேண்டும் என்றாலும் பெண்களில் தனியாக தன் ஸ்கூட்டியில் செல்கிறார்கள். 

Tuesday, January 6, 2015

சார் யாரு?



மற்றொருவரை சார் என்று ஒருவர் அழைக்கவில்லை என்றால் அவருக்கு மரியாதை தெரியவில்லை அல்லது திமிர் பிடித்தவன் என்பதுதான் அர்த்தம். இது தமிழகத்தில் நிலவும் பொதுவாக விஷயம். அரசாங்க வேலையில் இருப்பவர், கொஞ்சம் வயதானவர், பேண்ட் சட்டை அணிபவர், கார் வைத்திருப்பவர், இப்படி யாரோ ஒருவராக அவர் இருந்தால் அவரை சார் என்றுதான் விளிக்கவேண்டும். மாறாக அவர் பெயர் சொல்லியோ, அண்ணன் என்றோ, ஏங்க என்றோ சொன்னால் அதற்குபின்னால் அவர்களுக்கு அதனால ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆங்கிலேயர்கள்தான் சார் என்று சொல்வதை நமக்கு கற்றுக்கொடுத்தார்கள். வேலைக்காரன் முதலாளியை சார் எனலாம், அல்லது பெரிய சாதனைகளை படைத்தவரை சார் எனலாம் என்பதே அவர்கள் வழக்கம். ஆங்கிலேயர்களும் அமெரிக்கரும் யாராக இருந்தாலும் இதுதான் நடைமுறையில் உள்ளது.