Showing posts with label perumal murugan. Show all posts
Showing posts with label perumal murugan. Show all posts

Wednesday, January 14, 2015

பெருமாள் முருகனின் சரணாகதி



 
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை அதில் சொல்லப்பட்ட ஒரு பகுதிக்காக‌ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டி, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மன்னிப்பு கேட்கவைத்து, என்று பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு புத்தகம் திரும்ப பெற்றுக்கொள்வதாக அதில் உள்ள திருச்செங்கோடு என்று ஊரின் பெயரை நீக்குவதாக, இனிமேல் எழுதப்போவதில்லை என்றும் கூறவைத்திருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளருக்கு மட்டும் பெரிய இழப்பு அல்ல இந்த சமூகத்திற்கும்தான். இந்த ஒரு விஷயம் கேரளாவிலோ கர்நாடகாவிலோ நடந்திருக்காது என நினைக்கிறேன். பஷீர் இறந்தபோது முதல் பக்கம் முழுவதும் செய்தி வந்ததாக கூறுவார்கள். அனந்தமூர்த்தி இறந்தபோது அப்படி கர்நாடகாவில் நடந்து நாமே பார்த்தோம். தமிழகத்தில் பழமையான மொழி, தொன்மையான மொழி, தனிபெரும் மொழி என்று கூறிக்கொள்ளும் நாம் இன்னும் மொழி, இலக்கியம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பதும், நம்மைவிட சகிப்பு தம்மையுடன் அவர்கள் செயல்படுவது நாம் இன்னும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெரிவித்துவிடுகிறது.