மற்றொருவரை சார் என்று ஒருவர் அழைக்கவில்லை என்றால் அவருக்கு மரியாதை
தெரியவில்லை அல்லது திமிர் பிடித்தவன் என்பதுதான் அர்த்தம். இது தமிழகத்தில் நிலவும் பொதுவாக விஷயம். அரசாங்க வேலையில்
இருப்பவர், கொஞ்சம் வயதானவர், பேண்ட் சட்டை அணிபவர், கார் வைத்திருப்பவர், இப்படி யாரோ ஒருவராக அவர் இருந்தால் அவரை சார் என்றுதான் விளிக்கவேண்டும்.
மாறாக அவர் பெயர் சொல்லியோ, அண்ணன் என்றோ, ஏங்க என்றோ சொன்னால் அதற்குபின்னால் அவர்களுக்கு அதனால ஏற்படும்
பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆங்கிலேயர்கள்தான் சார் என்று சொல்வதை நமக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
வேலைக்காரன் முதலாளியை சார் எனலாம், அல்லது பெரிய சாதனைகளை படைத்தவரை
சார் எனலாம் என்பதே அவர்கள் வழக்கம். ஆங்கிலேயர்களும் அமெரிக்கரும் யாராக இருந்தாலும்
இதுதான் நடைமுறையில் உள்ளது.
