புதிய பள்ளிக்கூடம் எங்கள் ஊரில் திறக்க இருக்கிறார்கள். அது சாதாரண பள்ளி இல்லை. சென்னையில் இருக்கும் மிகப் பிரபல்யமான பண்ணாட்டு பள்ளி. அதற்கான பிரம்மாண்ட விளம்பரங்கள், பதாகைகள் அங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. தினசரிகளின் நடுவில் பளபளக்கும் விளம்பர காகிதம் சொருகப்பட்டு வந்தன. உடனே மக்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது கண்கூடாக தெரிந்தது. என் மகன் படிக்கும் பள்ளியில் படிக்கும் மகனின் தந்தை என்னிடம் 'கொஞ்சம் செலவு ஆனாலும் அந்த பள்ளிகூடத்துல சேர்த்துலாம்னு இருக்கேங்க' என்றார். நூலகத்தில் இருந்த நூலகர் 'எவ்வளவு செலவாகும்' என்றார். பணம் கொடுத்து மிலிடரி பள்ளியில் சேர்க்க நினைத்திருப்பதும், அது நடக்காவிட்டால் 6வது படிக்கும் மகளை இந்த பள்ளியில் சேர்க்க இருப்பதாக சொன்னார். தாமதித்தால் சீட் கிடைக்காது என்று கவலை கொண்டார். ‘படிப்பு விஷயத்துல அஜாக்கிரதையாக இருக்க கூடாது பாருங்க’ என்று உறுதியாக சொன்னார்.
Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts
Thursday, January 19, 2017
Wednesday, September 30, 2015
மொழி என்னும் ஊடகம்
ஊருக்கு சென்றிருந்த போது இரு நண்பர்களை சந்தித்தேன். அவர்கள்
உயர்கல்வி பயின்று அரசுதுறையில் நல்ல வேலையில் இருப்பவர்கள். ஒரு சயின்டிஸ்ட் மற்றவர்
டாக்டர். பேச்சினுடே மஹாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலைப் பள்ளிகள் மொத்தம் 3 மணிநேரம் தான் இயங்கும் என்று கேட்டதும் ஆச்சரியப்பட்டார்கள். மிச்ச
நேரம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்றார்கள். மிச்ச நேரம் நிறைய இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கராத்தே, புட்பால், இசை போன்ற எக்ஸ்ரா கரிகுலர் படிப்புகளுக்கு
செல்கிறார்கள் என்றேன். அதுதாங்க சரி, அதிகமான நேரம் பள்ளிகூடம் இருக்க கூடாது எனவும் அவர்களுக்கு நிறைய
விளையாட்டுகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் இருவரும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்தவர்கள். வேலை படிப்பு என்று தீவிரமான மனநிலை
கொண்டவர்கள். பள்ளிப்படிப்பை தாண்டி வேறு எந்த
விஷயங்களிலும் கவனத்தை சிதறடிக்காதவர்கள்.
Wednesday, August 19, 2015
கீழே நிற்கும் மனிதர்கள்
நம்மிலும் குறைந்த நிலையில் உள்ள மனிதர்களை நாம் எப்படி
நடத்துகிறோம் என்பதை பொறுத்து நாம் எந்த மாதிரியான குணமுடையவர் என்பதை காட்டிக் கொடுத்துவிடும்
என்பார்கள். பொருளாதார நிலையில் நம்மைவிட குறைந்தவர்கள், நம்மைவிட குறைந்த பதவியில் உள்ளவர்கள், நம்மைவிட விலை குறைந்த உடைகளை அணிபவர்கள், நம்மைவிட
கறுப்பானவர்கள், நம் சாதியைவிட குறைந்த படிநிலையிலுள்ள சாதியை உடைவர்கள் என்று பலரை நாம்
சந்தித்துக்கொண்டுதான் இருப்போம், அவர்களை நாம் எப்போது ஒரு மாற்று
குறைந்தவர்களாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோமோ
அல்லது அப்படி நிஜமாகவே நடிக்கிறோமா என்பதை சொல்லமுடியாது. அதே எல்லாவகையான மேல்படியில்
உள்ளவர்களை சந்திக்கும்போது மனதில் வைது கொண்டிருப்பதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஒரு பெரிய நிகழ்வு ஒன்று, இந்த சூழலுக்கு எதிரான அதாவது நம் சமூகம்
அது குறித்து முன்பே கட்டமைத்து வைத்திருக்கும் ஒன்றிற்கு எதிராக, நடக்கும் போது நாம் சர்வநிச்சயமாக செய்வது
'இது மாதிரி உலகத்துல இன்னும் நடந்துகிட்டுதான்
இருக்குதா, என்ன உலகம் இது' என்பதாகத்தான் இருக்கும்.
Friday, February 13, 2015
சோறுபோடும் கல்வி
செய்யும் வேலையை எப்போது நாம் கெளரவத்தோடு ஒப்பீடு செய்து
கொள்கிறோம். இன்ன வேலை செய்தால் கெளரவம், இன்ன வேலை கெளரவமில்லை போன்று.
அது கடைநிலை வேலை என்று இல்லை, எல்லா வேலைக்கும் பொருந்துகிறது.
இன்றைய சூழலில் ஒருவர் அப்பா செய்த அதே சிறிய வியாபரத்தை தொடர்ந்தால் அவருக்கு கெளரவமான
இடமில்லை. வேறு வேலைக்கு செல்ல தெரியாத, படிப்பால் இன்று எதுவும் செய்ய
முடியாதவர் என்று நினைக்கப்படுவார்.
இன்று என்ன வேலை ஒருவர் செய்ய வேண்டும் என்பதை சுற்றி உள்ளவர்களே
தீர்மானிக்கிறார்கள். அவர்கள் படித்துவிட்டு கம்யூட்டர் கம்பெனியில் வேலை செய்யவேண்டும்.
அதாவது ஒரு ஐடி துறை வேலையில் கைக்கு மாதம் ஆரம்பத்திலேயே 40000 பெறவேண்டும். அதுவும் கம்பெஸ் நேர்முக தேர்விலேயே தேர்தெடுக்கப்பட்டு
படிப்பு முடிந்ததும் அந்த வேலைக்கு சென்றுவிட வேண்டும். அப்புறம் கொஞ்ச நாளில் அமெரிக்கா
சென்று லட்சங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்றாலும்
இதை நோக்கித்தான் அவனது 9வது வகுப்பிலிருந்து
அதற்கு படித்து தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இசையில், எழுத்தில், ஆசிரியராக, அறிவியலில் ஒரு துறையில் என்று செல்பவதில்
ஆர்வத்தை செலுத்துபவர்கள் நடைமுறையை அறியாத மூடர்களாக கருதப்படுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)


