உங்களது ' யாக்கை' நாவல் வாசித்து முடித்தேன் தற்போது. ஒரே வாசிப்பில் முடிக்க முடியாமல், காலம் எடுத்து படிக்க வேண்டிய கனமான கருப்பொருளுடன் இருந்தது. கதையின் ஊடாக வரும் விவரணைகளில். எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வரிகளில் ஆழ்ந்து வாசிக்க வேண்டியிருந்தது. மனித வாழ்க்கையை உடல் எந்தளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது.அறியாமையில் வைத்திருக்கிறது. அகத்தேடலுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உடலை புறத்தேடல்களும்..புற சூழ்நிலைகளும் புரிந்துகொள்ளாத குடும்ப உறவுகளும். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களும் எந்தளவுக்கு சீர்குலைக்கின்றன என்பதை சுப்பிரமணியின் வாழ்க்கை மற்றும் எண்ண ஓட்டங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
Thursday, August 7, 2025
Saturday, May 24, 2025
யாக்கை பற்றி - சுமி ஹரி
மனித மனம் விசித்திரமானது. எப்போது, எதற்காக,எதை யோசிக்கும் என்று யாராலும் முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது.சூழ்நிலை தான் பெரும்பாலும் அப்படியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றாலும், சில சமயம் மனதுக்குள் தோன்றும் சலிப்பு, வெற்றிடம் என ஏதோ ஒன்று வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்து விடும்.
கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் ஏற்படும்போது, தன்னை அந்த குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறான் சுப்ரமணியன். அவன் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கிறது.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சிறு வயதிலிருந்து அவன் நேரிட்ட அனுபவங்கள், அதனால் வந்த பாதிப்பால் ஆன்மீகம்,தனக்கான குரு அதில் கிடைக்கும் அமைதி என தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறான் சுப்பிரமணியன்.
Tuesday, April 15, 2025
முன்னுரை - யாக்கை நாவல்
சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.
வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.
Saturday, December 2, 2023
ரமணிகுளம் கடிதம் - பா.ராஜேந்திரன்
அன்புள்ள அசோக்குமார்
உங்கள் ‘ரமணிகுளம்’ நாவலைப் படித்தேன்.
நான் காலச்சுவடில் ரமணிகுளத்தை பெற்று படிக்க ஆரம்பித்த சில நாட்களில் நூல் தொலைந்து விட, மீண்டும் ஒருமுறை வாங்கி விட்ட இடத்தில் இருந்து படித்து முடித்துவிட்டேன்.
அருமையாக இருந்தது. தொய்வற்ற வாசிப்பு தந்தது.
- ஒரு புறம் நகரத்தின் வளர்ச்சியால் காடு தோட்டம் ஆகி தோட்டம் தரிசாகி மனைகளாகி, மனைகள் வீடுகளாகி, வீடுகள் அடுக்ககங்கள் ஆகி அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்.
- அதே காலகட்டத்தில் மூன்று தலைமுறை மனிதர்களின் குணங்கள் உறவுகள் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள்.
- குடும்ப உறவுகள் சிதைவது.
Monday, July 1, 2019
இடம்பெயர்வின் துயரம்: காஃப்காவின் நாய்க்குட்டி
Monday, October 29, 2018
பொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை
1
Friday, October 6, 2017
விவேக் ஷான்பாக்கின் நிர்வாணம் கதை
Sunday, August 20, 2017
யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்
Monday, August 7, 2017
தீராத திருநாள் (குமார நந்தன்) கதைப் பற்றி - எஸ். பிரசன்னகிருஷ்ணன்
ஜம்பு, ஒரு திருவிழா நடக்கும் ஊரின் உணவகத்துக்கு தோசை மற்றும் புரோட்டா மாஸ்டரின் தட்டுப்பாட்டால் அங்கு செல்கிறான். மற்ற மாஸ்டர்கள் வேறு சில கல்யாண நிகழ்வுகளுக்கு உள்ளூரிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். ஜம்பு கடந்த நான்கு நாட்களில் பிழிந்தெடுத்த துணியை போன்ற உழைப்பினால் இன்று முழுநேர ஒய்வு எடுக்கலாம் என்று காத்திருந்தான். ஆனால் காலையில் வந்து கேட்ட இள வயது முதலாளியின் பேச்சை தட்டமுடியாமல் சென்று விட்டான். கூடுதல் கூலி என்ற ஒப்பந்தம் இவனை உந்தியது. அலை போல் மக்கள் கூட்டம் உணவகத்துக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். திருவிழா என்பதால் இடைவெளியின்றி ஜம்புவின் பணி தொடர்ந்து தேவைப்பட்டது. மதியம் பொதுவாக எடுக்கும் ஒய்வு கூட அறவே கூடாதென்று அந்த இள வயது முதலாளி கூறிவிட்டான். இவனுக்கும் மெஷின் போன்ற உடலியக்கம் பழகிவிட்டது. அந்தியில் ஊரில் விழாவுக்கான கலை உருவாகி இவன் கண்ணில் தென்பட்டது. இரவு ஒருவழியாக மக்கள் வரத்து நின்று போயி, வேலைகளை முடித்து, கூலி வாங்கி கடை ஆட்களுடன் குடித்தும் உணவருந்திவிட்டும், அருகே ஒரு மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனியாக செல்கிறான். போன இடத்தில் எதிர் பாரா வண்ணம் சில முகம் தெரியா நபர்களுடன் மேலும் குடியில் மூழ்குகிறான். நிகழ்ச்சியின் இடையில் குழம்பிய நிலையில் இவனிருக்கும் போது, மக்கள் கூட்டம் கூட்டமாக தெறித்து ஓடுகின்றனர். காக்கி சட்டை காரர்களின் வாகனங்கள் அங்குமிங்கும் ஒலி எழுப்பிய படி அலைந்து கொண்டிருந்தன. இவன் பயத்தினால் உந்தப்பட்டு நடைவேகத்தை கூட்டி கடையின் அருகில் வந்து படுத்து கொள்கிறான். பின்புறத்தில் லத்தியினால் பலமாக விழுந்தது ஒரு அடி. மைதானத்தில் கொலை நடந்ததற்கு அவன் தான் காரணம் என்று பழி சுமத்தப்படுகிறான். தலை கால் புரியாமல் காக்கி சட்டையின் மிரட்டலுக்கு இணங்கி அவர் பின்னால் சென்றான். வேறு ஏதோ ஒரு நபருடன் நீண்ட நேரம் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டிருக்கிறார். காக்கி சட்டையின் அலட்சியத்தை பயன்படுத்தி, வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் அந்த வழியாக சென்ற ஒரு பேருந்தில் ஏறிவிடுகிறான்.





