உங்களது ' யாக்கை' நாவல் வாசித்து முடித்தேன் தற்போது. ஒரே வாசிப்பில் முடிக்க முடியாமல், காலம் எடுத்து படிக்க வேண்டிய கனமான கருப்பொருளுடன் இருந்தது. கதையின் ஊடாக வரும் விவரணைகளில். எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வரிகளில் ஆழ்ந்து வாசிக்க வேண்டியிருந்தது. மனித வாழ்க்கையை உடல் எந்தளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது.அறியாமையில் வைத்திருக்கிறது. அகத்தேடலுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உடலை புறத்தேடல்களும்..புற சூழ்நிலைகளும் புரிந்துகொள்ளாத குடும்ப உறவுகளும். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களும் எந்தளவுக்கு சீர்குலைக்கின்றன என்பதை சுப்பிரமணியின் வாழ்க்கை மற்றும் எண்ண ஓட்டங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
Showing posts with label kalachuvadu. Show all posts
Showing posts with label kalachuvadu. Show all posts
Thursday, August 7, 2025
Tuesday, April 15, 2025
முன்னுரை - யாக்கை நாவல்
சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.
வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.
Monday, October 29, 2018
பொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை
1
மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையும் தருகின்ற ஒரு இடத்தை விட்டு மனிதர்கள் பிரிந்து செல்லமுற்படுவதில்லை. பிறப்பிலிருந்தே பெற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை விட்டு எளிதில் சென்றுவிடமுடியாத மனிதர்களாக தங்களை வைத்துக் கொள்வதில் ஆழ்ந்த நம்பிக்கைகளும், வெறுப்புகளையும் ஒரு சேர கொண்டவர்கள். அவர்கள் நகரத்தில் ஒதுக்கப்பட்ட யாரும் எளிதில் உள்நுழையாத, யாருக்கும் தெரியாத பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களின் மீதான நம்பிக்கைகளை அவர்களே இழந்தவர்கள். தங்களிடமிருந்து பிரிந்து வேறு ஒரு மனித கூட்டத்தில் சேர்ந்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையையும் இழந்தவர்கள். அவர்களது மொழியும், பழக்கங்களும் தனியே வரையரை செய்யப்பட்டவையாக உருவாக்கிவிட்டபின் அதுவே அவர்களின் பலமாகவும், பலவீனமாகவும் மாறிவிட்டிருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)


