Showing posts with label yakkai. Show all posts
Showing posts with label yakkai. Show all posts

Thursday, August 7, 2025

யாக்கையும் அகதேடல்களும்



நண்பருக்கு
,

 உங்களது ' யாக்கை' நாவல் வாசித்து முடித்தேன் தற்போது. ஒரே வாசிப்பில் முடிக்க முடியாமல், காலம் எடுத்து படிக்க வேண்டிய கனமான கருப்பொருளுடன் இருந்தது. கதையின் ஊடாக வரும் விவரணைகளில். எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வரிகளில் ஆழ்ந்து வாசிக்க வேண்டியிருந்தது‌. மனித வாழ்க்கையை உடல் எந்தளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது.அறியாமையில் வைத்திருக்கிறது. அகத்தேடலுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உடலை புறத்தேடல்களும்..புற சூழ்நிலைகளும் புரிந்துகொள்ளாத குடும்ப உறவுகளும். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களும் எந்தளவுக்கு சீர்குலைக்கின்றன என்பதை சுப்பிரமணியின் வாழ்க்கை மற்றும் எண்ண ஓட்டங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. 

Saturday, May 24, 2025

யாக்கை ‍பற்றி - சுமி ஹரி

மனித மனம் விசித்திரமானது. எப்போது, எதற்காக,எதை யோசிக்கும் என்று யாராலும் முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது.சூழ்நிலை தான் பெரும்பாலும் அப்படியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றாலும், சில சமயம் மனதுக்குள் தோன்றும் சலிப்பு, வெற்றிடம் என ஏதோ ஒன்று வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்து விடும்.
 

கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் ஏற்படும்போது, தன்னை அந்த குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறான் சுப்ரமணியன். அவன் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கிறது.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சிறு வயதிலிருந்து அவன் நேரிட்ட அனுபவங்கள், அதனால் வந்த பாதிப்பால் ஆன்மீகம்,தனக்கான குரு அதில் கிடைக்கும் அமைதி என தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறான் சுப்பிரமணியன். 

Saturday, May 17, 2025

யாக்கை நாவல் வாசிப்பு அனுபவம் - சோழன்

யாக்கை நாவலை ஆசிரியர் கே.ஜே. அசோக்குமார் எழுதியுள்ளார். இந்நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. யாக்கை என்றால் உயிர் கொண்ட உடலின் நிலை. இந்நாவல் மனிதனின் அகம் கொண்ட தேடலை பிரதானமாக விவாதிக்கிறது.காதல் மற்றும் காமம் தாண்டிய இன்பத்தை கண்டடைய வழிவகுக்கிறது.

Tuesday, April 15, 2025

முன்னுரை - யாக்கை நாவல்


 சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.

வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல‌ இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த‌ வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.