Showing posts with label தஞ்சைக் கூடல். Show all posts
Showing posts with label தஞ்சைக் கூடல். Show all posts

Wednesday, February 19, 2020

பேரன்பின் முடியுறா வார்த்தைகள்: சி.எம். முத்துவின் படைப்புலகம்


ஒர் எழுத்தாளரின் அனைத்து படைப்புகளையும் விமர்சிக்கும் நிகழ்வு எப்போது சிறப்பானது. முதன்முறையாக தஞ்சைக்கூடல் நிகழ்வில் சி.எம். முத்து அவர்களின் அனைத்து படைப்புகளை குறித்து பேசுகிறோம். இந்நிகழ்வு அவரது 70வது பிறந்தநாளை ஒட்டி நிகழ்கிறது. ஆகவே சிறப்பானதும், தஞ்சை கூடலுக்கு நிறைவானதுமான ஒரு நிகழ்வு.

இயல்புவாத நாவல்களின் சிறப்பு அதை ஆசிரியர் தன் போக்கில் புரிந்துக் கொண்டதை எந்தவித வெளிப்பூச்சுக்கு இடமளிக்காமல் முன்னிலைப் படுத்த முடியும் என்பதுதான். அந்த அழகியலைக் கொண்டு நாம் நாவலை புரிந்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் எந்த சிடுக்குமற்ற நாவல் வாசிப்பை நமக்கு அளிக்கிறார் எழுத்தாளர் சி.எம்.முத்து. அவர் வெளிப்படுத்தும் புறவயசித்தரிப்புகளை நாம் ஒருங்கிணைத்து அர்த்தப்படுத்திக் கொள்ள வாசகருக்கு இடமளிக்கிறார் சி.எம். முத்து.

கறிச்சோறு விமர்சனம் - செழியரசு


ஆற்றுக்கரையிலோ, வயல் காட்டிலோ அமைந்திருக்கும் முனியாண்டவர் அல்லது சுடலைமாடன் கோயிலில், நல்ல கோடைக் காலதில் பூசைப்போட்டு கிடாவை வெட்டி, அங்கேயே வெயிலில், கல்பொறுக்கி அடுப்புக்கட்டி, சுடச்சுட சோறாக்கி, கொதிக்கக் கொதிக்க குழம்பு வைத்து, பக்கத்துத் தோப்பில் வாழை இலை அறுத்து, அங்கேயே வேப்ப மரத்தடியில், தரையிலும் தலையிலும் சூடுதகிக்க பந்திபோட்டு வாடித்து இலையில் வழிந்தோட கறியும் குழம்புமாய் ஊற்றி, கூட்டமாய்க் குந்தி சாப்பிட்டறிந்தவனின் ருசி, அவனுக்குத்தான் விளங்கும், அதனையும்கூட அவனுக்கு ஓரளவுக்குத்தான் பிறருக்குச் சொல்லமுடியும்.

Thursday, August 1, 2019

கலங்கிய நதி விமர்சனம் - கலைச்செல்வி

 
ரமேஷ்சந்திரன் முடிந்தவரை நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரி. அவனின் மனைவி சுகன்யா. மகள் ப்ரியாவின் திடீர் இறப்பு அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அவன் அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அங்கு கோஷ் என்ற முதுநிலை பொறியாளரின் கடத்தலும், நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட பெருஊழல் ஒன்றும், ரமேஷை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. தான் கண்ட, கடந்த உண்மைகளை விபத்தில் அகப்பட்டு மருத்துவஓய்விலிருக்கும்போது புனைவாக்குகிறான். 

Thursday, July 11, 2019

காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் - கலைச்செல்வி

(தஞ்சைக்கூடலின் 29/6/19 அன்று பேசிய சிறப்புரையின் கட்டுரை வடிவம்.)


தஞ்சை கூடல் இலக்கிய வட்டம் 29.6.2019 நடத்திய விழாவில்..

எழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில “தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட்டத்தட்ட முந்நுாறு பக்கங்கள் கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.

Monday, December 31, 2018

நட்ராஜ் மகராஜுக்கு ஒரு கூட்டம்


தஞ்சைக்கூடலின் டிசம்பர் (29/12/18) இலக்கிய கூடல் சந்திப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்த எப்போது போன்ற கூட்டமாக அல்லாமல் எழுத்தாளர் தேவிபாரதியின் சிறப்பு பங்கேற்பாகவும், அவரது பிறந்தநாள் விழாவாகவும் அமைந்து விட்டது. இதுவரை நடந்த கூட்டங்களிலிருந்து சிறிது திளைப்பாகவும், கொண்டாட்டமாகவும் இந்த ஆண்டின் கடைசியில் அமைந்தது அடுத்த ஆண்டிற்கு இன்னும் சிறப்பாக செய்ய உத்வேகமாகஇருக்கிறது. எளிய பண்பான மனிதராகவும் தன்னை இன்றும் சாதாரண மனிதனாக காட்டிக் கொள்வதில் பெருமிதத்துடன் இருக்கிறார் தேவிபாரதி. அவர் எழுதிய நடராஜ் மகராஜ் நாவல்தான் இந்த மாத கூட்டத்தின் கலந்துரையாடல் பேசுபொருள்.

Sunday, October 15, 2017

தஞ்சைக் கூடலின் செப்டம்பர்'17 மாதக் கூட்டம்



புதிய நண்பர்கள் ஒவ்வொரு மாதமும் இணைவது நடந்துக் கொண்டேயிருக்கிறது. சிலர் வரமுடியாமல் போவதும் நிகழ்கிறது. இந்த மாதம் கரந்தை ஜெயக்குமார், சுரேஷ் பிரதீப், பேராசிரியர் கல்பனா, தமிழ் பல்கலைக்கழக மாணவர் ராமசந்திரன் போன்றவர்கள் புதியவர்கள். முதலில் சுரேஷ் பிரதீப் தான் மாலை 4.55க்கே வந்துவிட்டிருந்தார். போன் செய்து கூறிய அரை மணி நேரம் கழித்துதான் நான் சென்று சேர்ந்தேன். சுரேஷை இப்போதுதான் முதலில் சந்திக்கிறேன். அன்பும், அமைதியும் கொண்ட இளம்மனிதராக தெரிகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின் ஹரணி, அவரது நண்பர்களுடனும், வியாகுலன், சி.எம்.முத்து நண்பர்களுடனும் வந்து சேர்ந்தார்கள்.

Sunday, October 1, 2017

இரு கதைகள்

வரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கிஆனந்த விகடன் (4/10/17)
கலைச்செல்வி எழுதிய புகார்குறி, காலாண்டிதழ் (சூலை ஆகஸ்ட் செப். 2017).
கூடல் நிகழ்வு - 30.09.2017 - மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, தஞ்சாவூர்.
 
சிறுகதைகள் சமூக மாற்றத்திற்கு வித்திடுபவை. சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவைசமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை என்கிற கருத்துகள் ஒருபக்கம் இருந்தாலும். ஒரு கதை வாசிக்கையில் எளிமையும் சுவையும் விடாது வாசிக்க வைக்கும் இயல்பையும் ஏற்படுத்தவேண்டும். அவ்வகையில் இவ்விருகதைகளும் முற்றிலும் உதவுகின்றன.

Tuesday, August 29, 2017

ஆகஸ்ட் மாத தஞ்சைக் கூடல் கூட்டம் (19-08-17)



ஒவ்வொரு முறை கூட்டம் முடிந்ததும் இந்த கூட்டத்தோடு போதும் என்று தோன்றும். இந்தமுறையும் தான். ஆனால் அது அடுத்த கூட்டம் வரும்வரை மட்டுமே நீடிக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் புதுப்புது நண்பர்கள் வருவது உற்சாகத்தை அளித்துவிடுகிறது. புத்தம் புதிய விஷயங்கள் கூட்டத்தில் சேர்ப்பதும் நடக்கிறது. அதனால் ஒவ்வொரு சமயமும் ஒரு புதிய அனுபவம் கிடைத்துவிடுகிறது. இந்த முறை ஹைலைட் சி.எம்.முத்து அவர்கள்தான். அவர் பங்கேற்பாளராக வந்திருந்தாலும் பேசும் ஒவ்வொரு சமயமும் சிரிப்பு பீரிட்டது. இதற்கு முன்பு முத்தமிழ் விரும்பி அவர்கள் கூட்டியிருந்த கூட்டத்தில் சி.எம். முத்து தன் எழுத்து அனுபவங்களை பேசும்போது வந்திருந்த அத்தனைப் பேரும் சிரிப்பை சிரிப்பை நிறுத்தமுடியாமல் தவித்தோம். அவர் எழுதி சாகித்ய அகாதமி வெளியீட்டில் சில எழுத்தாளர்களின் கட்டுரைகளாக தொகுக்கப்ட்டிருந்த எழுத்தும் வாழ்வும் என்கிற நூலில் இருந்த அவரை கட்டுரையைதான் அன்று வாசித்தார். பெரும் அனுபங்கள் கொண்ட யாவர்க்கும் தங்கள் வாழ்வை சொல்லும்போது அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேடிக்கையாகவே இருக்கிறது.

Sunday, August 20, 2017

யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்




எனக்கு தெரிந்து மூன்று வகையான எழுத்துகள் இலக்கிய வகை எழுத்திற்கு உண்டு என நினைக்கிறேன். ஒன்று நேரடியான அனுபவங்களை எந்த சிக்கல் இல்லாமல் விவரிப்பது, எளிய முயற்சியால் அதை படித்துவிட முடியும். இரண்டாம் வகை இரண்டாம் முறை படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. நம் அனுபவதளத்தை சற்று ஒருபடியேனும் உயர்த்தி காட்டிவிடுபவையாக இருக்கும். மூன்றாம் வகை படிக்க எளிதாக இருக்கும் அனுபவ தளமும் நாம் அறிந்தஒன்றாக இருக்கும். இருந்தும் புரிந்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும். எப்போது படித்தாலும் புதியதாக படிப்பது போலிருக்கும். முதல்வகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மூன்றாம் வகைக்கு மெளனி, கோணங்கி போன்றவர்களை சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உள்ளவர்களில் யுவன் சந்திரசேகரும் உண்டு. அவர் எழுதிய பரமபதம் (அ) அறுந்த சரம் அப்படியான ஒன்று. சற்று முயற்சி எடுத்து மட்டுமே புரிந்துக்கொள்ளக் முடியும். (காலச்சுவடு ஆகஸ்ட்'17 இதழ் கதை.)

Friday, August 18, 2017

களிமண் பட்டாம்பூச்சிகள் (சுப்ரபாரதி மணியன்) கதைப் பற்றி ஹரணி



கதையின் தலைப்பு ஒரு ஜென் அனுபவக் கவிதையின் முதல் அடியைப் போல இருந்தது பிடித்துப்போனது வாசிக்கத் தொடங்குமுன். ஆகவே இக்கதையை வாசித்து முடித்தேன். அப்புறம் இதுகுறித்த விமர்சனத்திற்காக ஐந்துமுறை வாசித்து முடித்தேன்.

Wednesday, August 9, 2017

தஞ்சைக் கூடல் ஜூலை மாதக் கூட்டம் (29/7/17)



எப்போதும் போன்றதொரு பதட்டம் இந்தமுறையும். பதட்டத்தின்படி எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் இயல்பாக இருக்க முடியவில்லை. இடத்திற்கு போனதும் எல்லாம் மறைந்து கொஞ்சம் இயல்பிற்கு திருப்பியது. பிரசன்ன கிருஷ்ணன் முன்பே வந்திருந்தார். அவர் திருச்சியில் இருந்து பஸ் பிடித்து இடந்தேடி வந்துவிட்டிருந்தார். இலக்கியம் ந்ம்மை எப்படியெல்லாம் அழைத்துச் செல்கிறது. அவர் பெங்களூருவில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

நான் அவருடன் பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் வியாகுலனும், மா.கோவிந்தராஜுவும் வந்துவிட்டார்கள். இலக்கியமும் நடைமுறை வாழ்க்கையும் மாறிமாறி பேச்சில் கலந்திருந்தது. ஹரணி, கவிஜீவன், ராகவ் மகேஷ் வந்ததும் பேச்சில் சுவாரஸ்யங்கள் கூடின. அதே வேகத்தில் கூட்டத்தை தொடங்கிவிடவேண்டும் என்கிற எண்ணத்தோடு அறிமுக பேச்சை தொடங்கினேன். ராகவ் மகேஷின் நண்பர்களான ரா.பிரபு, கணேஷ்ராவ் இருவரும் வந்திருந்தார்கள். தமிழம்மா அன்பரசி டீச்சர் முதல் முறையாக வந்திருந்தார். பார்க்கும் ஒவ்வொரு சமயமும் வர்வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

Friday, June 30, 2017

தஞ்சைக் கூடல் ஜூன்மாத கூட்டம் (24/6/17)



இந்த மாதக் கூட்டம் எப்போது போன்ற ஒன்றாக அமையவில்லை. எங்களின் புரிதல்களை ஒரு படி மேலாக ஆக்க உதவியிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமே என்பதை தாண்டி கூட்டத்தை எப்படி நடத்துவது என்கிற திட்டம் எதுவுமில்லாமல் இருந்தோம். இனி வரும் நாட்களில் அப்படி இருக்க முடியாது.

எஸ்.செந்தில்குமார் வருவதாக இருந்தார். கடைசி நேரத்தில் வேறு ஒரு கூட்டதிற்கு செல்லவேண்டிய நிர்பந்தம் அவருக்கு, ஆகவே வரவில்லை. அண்டனூர் சுரா சற்று தாமதமாக வருவதாக சொல்லியிருந்தார். அவருக்கிருந்த வேலையால் வரமுடியாமல் போய்விட்டது. நா.விச்வநாதன், ஹரணி, .பிரகாஷ் மற்றும் நான் என்று வரிசையாக பேச ஆரம்பித்தோம். ஜூன் மாத இலக்கிய இதழ்களில் வந்துள்ள கதைகள் தாம் பேசுபொருள்.