ஒர் எழுத்தாளரின் அனைத்து படைப்புகளையும் விமர்சிக்கும் நிகழ்வு எப்போது சிறப்பானது. முதன்முறையாக தஞ்சைக்கூடல் நிகழ்வில் சி.எம். முத்து அவர்களின் அனைத்து படைப்புகளை குறித்து பேசுகிறோம். இந்நிகழ்வு அவரது 70வது பிறந்தநாளை ஒட்டி நிகழ்கிறது. ஆகவே சிறப்பானதும், தஞ்சை கூடலுக்கு நிறைவானதுமான ஒரு நிகழ்வு.
இயல்புவாத நாவல்களின் சிறப்பு அதை ஆசிரியர் தன் போக்கில் புரிந்துக் கொண்டதை எந்தவித வெளிப்பூச்சுக்கு இடமளிக்காமல் முன்னிலைப் படுத்த முடியும் என்பதுதான். அந்த அழகியலைக் கொண்டு நாம் நாவலை புரிந்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் எந்த சிடுக்குமற்ற நாவல் வாசிப்பை நமக்கு அளிக்கிறார் எழுத்தாளர் சி.எம்.முத்து. அவர் வெளிப்படுத்தும் புறவயசித்தரிப்புகளை
நாம் ஒருங்கிணைத்து அர்த்தப்படுத்திக் கொள்ள வாசகருக்கு இடமளிக்கிறார் சி.எம். முத்து.







