மனித மனம் விசித்திரமானது. எப்போது, எதற்காக,எதை யோசிக்கும் என்று யாராலும் முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது.சூழ்நிலை தான் பெரும்பாலும் அப்படியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றாலும், சில சமயம் மனதுக்குள் தோன்றும் சலிப்பு, வெற்றிடம் என ஏதோ ஒன்று வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்து விடும்.
கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் ஏற்படும்போது, தன்னை அந்த குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறான் சுப்ரமணியன். அவன் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கிறது.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சிறு வயதிலிருந்து அவன் நேரிட்ட அனுபவங்கள், அதனால் வந்த பாதிப்பால் ஆன்மீகம்,தனக்கான குரு அதில் கிடைக்கும் அமைதி என தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறான் சுப்பிரமணியன்.