Showing posts with label யுவன் சந்திரசேகர். Show all posts
Showing posts with label யுவன் சந்திரசேகர். Show all posts

Thursday, September 5, 2019

கானல் நதி விமர்சனம் - கலைச்செல்வி

எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன். தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில் இருந்தபடி சாரங்கன் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன். பிறகு எங்கிருந்து யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு என் குழப்பத்தை கூடுதலாக்கியது.

Tuesday, September 3, 2019

இசைவாகா வாழ்க்கை - கானல் நதி விமர்சனம்


இசை வாழ்க்கை என்பது ஒரு பழமையான வாழ்க்கை முறையோடு இயைந்துவிட்டது என்கிற எண்ணம் நம் மனதில் எங்கோ இருக்கிறது. கிராமபோன், அதன் இசைத்தட்டுகள், வால்வு ரேடியோக்கள், ஹார்மோனியம், பழைய வீணை ஆகியவைகளின் நினைவுகள் நம் அந்த உணர்வுகளை உறுதிப்படுத்துகின்றன. பழமையடையும்போது இசைக்கு திடமான ஒரு அழுத்த உணர்ச்சி கூடிவிடுகிறது போலும். இசை பழமை அடைய அடைய அது எளிமையடைகிறது, கூடவே இசையின் நுணுக்கங்கள் புரிபட ஆரம்பிக்கின்றன. புதிதாக இருக்கும்போது மெட்டின் மேல் குவியும் மனம் பழையதாகும்போது வார்த்தைகளின் மேல் குடிகொள்கிறதே அதுபோல.

Sunday, August 20, 2017

யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்




எனக்கு தெரிந்து மூன்று வகையான எழுத்துகள் இலக்கிய வகை எழுத்திற்கு உண்டு என நினைக்கிறேன். ஒன்று நேரடியான அனுபவங்களை எந்த சிக்கல் இல்லாமல் விவரிப்பது, எளிய முயற்சியால் அதை படித்துவிட முடியும். இரண்டாம் வகை இரண்டாம் முறை படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. நம் அனுபவதளத்தை சற்று ஒருபடியேனும் உயர்த்தி காட்டிவிடுபவையாக இருக்கும். மூன்றாம் வகை படிக்க எளிதாக இருக்கும் அனுபவ தளமும் நாம் அறிந்தஒன்றாக இருக்கும். இருந்தும் புரிந்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும். எப்போது படித்தாலும் புதியதாக படிப்பது போலிருக்கும். முதல்வகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மூன்றாம் வகைக்கு மெளனி, கோணங்கி போன்றவர்களை சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உள்ளவர்களில் யுவன் சந்திரசேகரும் உண்டு. அவர் எழுதிய பரமபதம் (அ) அறுந்த சரம் அப்படியான ஒன்று. சற்று முயற்சி எடுத்து மட்டுமே புரிந்துக்கொள்ளக் முடியும். (காலச்சுவடு ஆகஸ்ட்'17 இதழ் கதை.)