இந்த விடுமுறையில் என் மகனை அழைத்துக்கொண்டும் என் மனைவியுடன்
அவளின் உறவினர்கள் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஒரு முதிய தம்பதிகள் இருவர் மட்டும்
இருக்கும் இல்லம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு குழந்தைக இல்லையா என்றான் மகன்.
எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த பெண்மணி இருக்காங்கபா, நாலு பசங்க இருக்காங்க இந்த போட்டோவுல பார்த்தா தெரியும் என்றார்.
மேலே தொங்கவிடப்பட்டிருந்த போட்டோக்களைக் காட்டி. எங்க அவங்ககெல்லாம் என்றான். வருவாங்க
காட்றேன் என்றார். ஒரு மகன் மட்டும் உள்ளூரில் வேறு வீட்டில் இருக்கிறார். மற்றவர்கள்
வேறு ஊரில் இருக்கிறார்கள். அவர்களுடம் பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்குபின் அவரின்
முதல் மகன் அங்கு வந்தார். இவன் தான் என் மகன் என்று அறிமுகப்படுத்தியதும், இல்ல சின்ன குழந்தைக இல்லையா என்றான் என்
மகன். ஒருவீட்டில் பிள்ளைகள் என்று இருந்தால் அவர்கள் குழந்தைகளாக இருக்க வேண்டும்
என்று நினைத்திருக்கிறான்.
நான் இருக்கும் புனே நகரத்தில் அம்மா அப்பா இரு குழந்தைகள்
மட்டுமே கொண்ட குடும்பங்கள்தான் எல்லா வீடுகளிலும் என்பதை அவன் கூறியதும் அவதானிக்க
முடிந்தது. தினமும் அவன் வெளியே சென்று அவனுடம் விளையாடும் அந்த குழந்தைகளுக்கு கிட்டதட்ட
ஒரே வயதுதான். 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள்.