Showing posts with label விளம்பரம். Show all posts
Showing posts with label விளம்பரம். Show all posts

Friday, December 11, 2015

நவீனத்தை கொண்டுவந்த‌ விளம்பரங்கள்



தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் நாம் அதிகம் பார்த்த‌ விளம்பரங்கள் நிர்மா, சாரிடான், அனாசின், விக்ஸ், கோல்கேட், 501, டெட், ஜீவன்டோன் போன்றவைகள் தான் இருக்கும். இவைகளை தாண்டி வேறு விளம்பரங்களை கவனித்து ஒருவர் தம் மனதில் நிறுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் வித்தியாசமான ஆள் தான். அவருக்கு விளம்பரங்களின் மீது தனியாத ஆர்வமும், தொடர்ந்து நாட்டு நடப்புகளை கவனிப்பவருமாக இருப்பார் என நினைக்கிறேன்.
எந்த திரையரங்கிலும் சினிமாவிற்கு முன் காட்டபடும் ஆரம்ப விளம்பர பகுதிகளில் இந்த விளம்பரங்கள் இருக்கும். இவற்றில் சில விளம்பரங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 70-80களில் இவைகளை வாங்க வைக்க இதன் நிறுவனங்கல் மிக சிரமபட்டன. பெரிய போட்டிகள் இல்லாத காலங்களில் இவைகளை வாங்க மக்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். அப்போது மக்களுக்கு தேவையானவைகள் அவர்கள் இருக்கும் இடங்களியே கிடைத்துவந்தன. சோப்பிற்கு சவுக்காரம் கட்டி, பேஸ்டுக்கு பற்பொடி, தலைவலிக்கு சுக்கு கஷாயம் என்று அனைத்துமே கிடைத்த‌ன. ஆகவே மக்களுக்கு இவைகளைத் தாண்டி காசு கொடுத்து (அல்லது அதிக காசு கொடுத்து) வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

Thursday, June 4, 2015

நடிகர்களும் விளம்பரமும்

நடிகர்களுக்கும் அவர்கள் நடிக்கும் விளம்பரங்களும் சம்பந்தமில்லை, அது வெறும் நடிப்புதான், அதை சீரியசாக எடுத்துக்கொள்ளகூடாது, அந்த பொருளின் அம்பாசிடர் கிடையாது என்று பலவாறு பேசப்படுவதை கேட்கிறோம். எல்லாமே ந‌ன்றாக போய்க் கொண்டிருக்கும்போது இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஒரு அசம்பாவிதமும், விளம்பரங்களுக்கு எதிரானதும் நடக்கும்போதுதான் இதை பெரிதாக விவாதிக்கவேண்டியிருக்கிறது. அதுவரை சம்பந்தப்பட்ட நடிகர்கள் கவலை கொள்ளாது பணத்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

சினிமா நாடகம் போன்றவைகள் நடிப்புதான். அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்தை சரியாக இயக்குனர்கள் சொல்வது மாதிரி நடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். சிலர் வெற்றிபெறுவதும் சிலர் அதில் தோல்வியடைவதும் நடக்கிறது. ஆனால் விளம்பரம் நடிப்பல்ல, நிஜம். நிஜமாக சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை நடித்து சொல்கிறார்கள். ஆகவே வரும் எல்லா விளம்பரத்திலும் அவர்கள் நடிப்பார்கள் என்று சொல்லமுடியுமா? காண்டம் விளம்பரத்திற்கு இந்த நடிகர்கள் நடிப்பார்களா? அல்லது இரவு 11 மணிக்கு மேல் அந்தரங்கம் பேசும் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வர சம்பதிப்பார்களா? என்பதையும் யோசிக்க வேண்டும்.

Wednesday, February 25, 2015

குழந்தை உணவு

தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி குழந்தைகளின் டிவியில் உணவு விளம்பரங்கள் வரக்கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார். சட்டப்படி அப்படி இருக்கிறதா தெரியவில்லை, ஆனால் அவர் சொல்வது முற்றிலும் சரி என்று நினைக்கிறேன். குழந்தைகள் அந்தவயதில் அதிகம் பார்ப்பது, கேட்பதுமான விஷயங்கள்தான் அவர்கள் மனதில் ஆழப்பதிவாகின்றன என்று சொல்வார்கள். மற்ற‌ டிவியில் வரும் பர்கர், பீசா, நூடுஸ்கள் போன்ற விளம்பரங்கள் அவர்களை சாப்பிட தூண்டினாலும், குழந்தைகளுக்கான பிரத்தியேக டிவியில் இந்த விளம்பரங்கள் வரும்போது இன்னும் அதிகமாக‌ அவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளின் உணவு பிரச்சனை எல்லா வீடுகளிலும் இருக்கிறது. எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் இதை உண்பதில்லை அதை உண்பதில்லை என்று பெருமை படுவதை பற்றி ஒரு கிண்டல்கூட இருக்கிறது. வருத்தம் தானே படவேண்டும்? மாறாக பெருமை படுகிறார்கள். அவர்களே இதை ரசிக்கிறார்கள், தங்கள் குழந்தைகள் உடல் நலம் கெட்டு, ஆரோக்கியமற்ற குழந்தைகளாக வளர அவர்கள் பிரிய படுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.