Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Wednesday, October 6, 2021

சுஜாதாவின் சொல்லுக்காக புனைபெயர் வைத்துக் கொண்டேன்: எழுத்தாளர் ஹரணியின் பேட்டி

. அன்பழகன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் ஹரணி மிக இளம்வயதிலிருந்தே எழுத தொடங்கிவிட்டார். தஞ்சாவூர் ஹரணி என்று சில நேரங்களில் எழுதும் இவர், ஹரிணி என்கிற தன் நண்பரின் குழந்தையின் வைணவ பெயரை சைவ பெயராக மாற்றி ஹரணி என வைத்துக் கொண்டார். அன்பழகன் என்பது கூட அவர் அப்பா, அப்போதைய தலைவர் .அன்பழகன் போல சிறந்த அறிஞராக வேண்டி வைத்தது என்று கூறுவார். அவர் அப்பா அமைத்து கொடுத்த சிறு நூலகத்தின் உந்துதலால் அப்பாவின் விருப்பம்போலவே படித்து கல்லூரி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் ஆனவர்.

கல்லூரி ஆசிரியர் பணிக்கு தினமும் தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை காலையும் மாலையும் பேருந்தில் பல ஆண்டுகளாக பயணம் செய்திருக்கிறார். பிறகு ரயில் சேவை பரவலானதும் ரயிலில் அப்பயணத்தை தொடர்கிறார். அப்பேருந்து பயண அனுபவத்தை 'பேருந்து' எனும் நாவலாக எழுத அது அவரை பிரபலப்படுத்தியது. நீண்ட பேருந்து வாழ்க்கையின் அனுபவத்தை சொல்லும் நாவல், ஒரு பெரிய சமூக வளர்ச்சி வீழ்ச்சி மாற்றத்தை அந்நாவல் முன் நிறுத்துகிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல வகைமையில் எழுதியிருக்கும் அவர், ‘அப்பிராணி’ ‘சாலையைக் கடக்கும் நத்தைகள்’ போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். உயிர்க்குடில் (1995), ஒவ்வொரு மழை நாளிலும் (2000), மறுபடியும் நதி வரும் (2002), வலை (2004), காலம் நின்றவர்கள் (2007), புரண்டுபடுக்கும் வாழ்க்கை (2011), செல்லாத நோட்டு (2012), அப்பா (2020) போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதியிருக்கிறார். காந்தியும் குமரேசனும் (2015), மிட்டாய் வண்டி சிறுவர் தொகுப்பு (2019) போன்ற சிறார் கதைகளையும் எழுதியிருக்கிறார்.

தஞ்சை ப்ரகாஷுடன் நெருங்கிய நட்பு கொண்டவர், அவருடன் இருந்த மற்ற இலக்கிய நண்பர்களுடனும் நெருக்கமான நட்பை பேணிவருபவர். தஞ்சாவூர் கரந்தையில் வசிக்கும் அவருடனான ஒரு சிறு உரையாடல்.


Monday, October 2, 2017

மினி பேட்டி -- பேசும் புதியசக்தி

செப்டம்பர்'17 பேசும் புதியசக்தி இதழில் என் மினிபேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டியை முழுமையாக வாசிக்க விரும்புபவர்களுக்காக, கேள்விகள் எஸ்.செந்தில்குமார்.

Friday, January 9, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல் : இரண்டாம் பகுதி



கேள்வி: கிரிஷ் கார்னாட்டின் நாடகங்களை பல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். குறிப்பாக பலிபீடம்அதில் முன்னுரையிலேயே இது தமிழில் அறங்கேறுமா என பார்த்து மொழிபெயருங்கள் என்று கூறியிருக்கிறார் கிரிஷ் கர்னாட்அவர் சொன்னது போல் இதுவரை ஒருமுறைகூட மேடை ஏறவில்லை. வருங்காலத்தில் நாடகம் என்றவகை தமிழ் இலக்கியத்தில் இல்லாமல் போய்விடுமா?

பாவண்ணன்:  நாடகமே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக நாடகச் செயல்பாடுகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும். தமிழ்ச்சூழலின் பிரச்சினை, நாடகங்களுக்கான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான். ரசனையுணர்வும் மேலான தேடலுணர்வும் கொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக நாடகங்களுக்கான வரவேற்பும் பெருகும். அதுவரை, ஒரு சிறிய கூட்டத்தினருக்கான செயல்பாடாக மட்டுமே நாடகம் சுருங்கியிருக்கும். கிரிஷ் கார்னாடின் நாடகங்கள் புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகிய பின்னணிகளைக் கொண்டவை. அந்தக் களங்களிலிருந்து நாடகத்துக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். சமகாலத்துக்குரிய பார்வையை விவாதிக்கும் ஒரு களமாக அக்கருக்களை அவர் புனைந்துகொள்கிறார். நாடகத்தில் துக்ளக் பேசினாலும், அதை ஒரு நவீன அரசியல்வாதியின் பேச்சாகவே பார்வையாளர்கள் உணரும் வகையில் அவருடைய புனைவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்தியத்தாயை மனத்தில் வைத்துக்கொண்டு  பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதியதுபோல கார்னாட் தன் நாடகங்களை அமைக்கிறார். 

Thursday, January 8, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் பாவண்ணனுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லை. 3 நாவல்கள், 16 சிறுகதை தொகுப்புகள், 17 கட்டுரை தொகுப்புகள், 19 மொழிபெயர்ப்புகளை செய்தவர். அவரது கதைகளும் கட்டுரைகளும் நுண்ணிய வெளிப்பாடுகளாக எப்போதுமே உள்ளன. சமீபத்திய சிறுகதை தொகுப்பான பாக்குத்தோப்பும் அப்படிதான். நாவல்களில் சிதறல்களும், பாய்மரகப்பலும் முக்கிய நாவல்களின் வரிசையில் சேர்ந்தவைகள். பழகுவதற்கு எளிய இனிய மனிதர். அவருடன் அவ்வப்போது நடந்த உரையாடல்களில் சிறிய கேள்விகளுக்கும் விரிவான விளக்கமாக பதிலளித்து நிறைவாக இருந்தது. அவற்றின் தொகுப்புதான் இது.