எழுத்தாளர் பாவண்ணனுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லை. 3 நாவல்கள், 16 சிறுகதை தொகுப்புகள், 17 கட்டுரை தொகுப்புகள், 19 மொழிபெயர்ப்புகளை செய்தவர். அவரது கதைகளும் கட்டுரைகளும் நுண்ணிய வெளிப்பாடுகளாக எப்போதுமே உள்ளன. சமீபத்திய சிறுகதை தொகுப்பான பாக்குத்தோப்பும் அப்படிதான். நாவல்களில் சிதறல்களும், பாய்மரகப்பலும் முக்கிய நாவல்களின் வரிசையில் சேர்ந்தவைகள். பழகுவதற்கு எளிய இனிய மனிதர். அவருடன் அவ்வப்போது நடந்த உரையாடல்களில் சிறிய கேள்விகளுக்கும் விரிவான விளக்கமாக பதிலளித்து நிறைவாக இருந்தது. அவற்றின் தொகுப்புதான் இது.