தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த
கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின்
காஃப்காவின் நாய்க்குட்டி பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.
எதார்த்த
வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின்
நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ
சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக
இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு
மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை,
கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின.


