ஊருக்கு சென்றிருந்த போது இரு நண்பர்களை சந்தித்தேன். அவர்கள்
உயர்கல்வி பயின்று அரசுதுறையில் நல்ல வேலையில் இருப்பவர்கள். ஒரு சயின்டிஸ்ட் மற்றவர்
டாக்டர். பேச்சினுடே மஹாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலைப் பள்ளிகள் மொத்தம் 3 மணிநேரம் தான் இயங்கும் என்று கேட்டதும் ஆச்சரியப்பட்டார்கள். மிச்ச
நேரம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்றார்கள். மிச்ச நேரம் நிறைய இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கராத்தே, புட்பால், இசை போன்ற எக்ஸ்ரா கரிகுலர் படிப்புகளுக்கு
செல்கிறார்கள் என்றேன். அதுதாங்க சரி, அதிகமான நேரம் பள்ளிகூடம் இருக்க கூடாது எனவும் அவர்களுக்கு நிறைய
விளையாட்டுகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் இருவரும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்தவர்கள். வேலை படிப்பு என்று தீவிரமான மனநிலை
கொண்டவர்கள். பள்ளிப்படிப்பை தாண்டி வேறு எந்த
விஷயங்களிலும் கவனத்தை சிதறடிக்காதவர்கள்.