Wednesday, December 5, 2018

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 சாகித்ய அகாடமி விருது


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் எஸ்.ரா. நாவல், சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பயணஇலக்கியம், திறனாய்வு என்று பல ஜானர்களின் எழுதி குவித்திருக்கிறார். 125 நூல்கள் இதுவரை அவர் எழுதியுள்ளார்.

முழுநேர எழுத்தாளராக இருக்கும் எஸ்.ரா. வாழ்நாள் சாதனைக்காக இயல், தாகூர் போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். இலக்கியம் மீது தீராத காதல் கொண்டு அவர் படிக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். கவனத்திற்கு வரும் அத்தனை சிறந்த புத்தகங்களையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

கரிசல் பூமி அவரது எல்லா படைப்புகளிலும் வெளிபட்டிருக்கிறது. சஞ்சாரம் நாவல்கூட கரிசல் பூமியில் அழைந்து திரியும் நாகஸ்வர கலைஞர்களின் கதை தான். கி,ரா, தேவதச்சன், கோணங்கி போன்ற தன் முன்னோடிகளை போல எஸ்.ராவும் தொடர்வது இயங்கி வருகிறார். இவ்வாண்டு அவர் பெரும் சாகித்ய அகாடமி விருதிற்கு எம் வாழ்த்துகள்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எஸ் ரா அவர்களை வாழ்த்துவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களுடன் சேர்ந்து நாங்களும்...வாழ்த்துகிறோம்.