Friday, June 30, 2017

தஞ்சைக் கூடல் ஜூன்மாத கூட்டம் (24/6/17)



இந்த மாதக் கூட்டம் எப்போது போன்ற ஒன்றாக அமையவில்லை. எங்களின் புரிதல்களை ஒரு படி மேலாக ஆக்க உதவியிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமே என்பதை தாண்டி கூட்டத்தை எப்படி நடத்துவது என்கிற திட்டம் எதுவுமில்லாமல் இருந்தோம். இனி வரும் நாட்களில் அப்படி இருக்க முடியாது.

எஸ்.செந்தில்குமார் வருவதாக இருந்தார். கடைசி நேரத்தில் வேறு ஒரு கூட்டதிற்கு செல்லவேண்டிய நிர்பந்தம் அவருக்கு, ஆகவே வரவில்லை. அண்டனூர் சுரா சற்று தாமதமாக வருவதாக சொல்லியிருந்தார். அவருக்கிருந்த வேலையால் வரமுடியாமல் போய்விட்டது. நா.விச்வநாதன், ஹரணி, .பிரகாஷ் மற்றும் நான் என்று வரிசையாக பேச ஆரம்பித்தோம். ஜூன் மாத இலக்கிய இதழ்களில் வந்துள்ள கதைகள் தாம் பேசுபொருள்.

Thursday, June 29, 2017

வாசிப்பை நேசிக்கும் சமூகம்



எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கிடையே பேசிக் கொள்கிறார்கள். எது சிறந்த தொடர், அதில் வரும் கதாபாத்திரங்கள் எப்படி இயங்குகிறார்கள், அவர்களின் பாத்திர வடிவமைப்பைப் பற்றி, அவர்களின் குணநலன்களைப் பற்றி, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை தவிர்த்து, நாளில் ஒரு சில நிமிடங்களேனும் பேசிக் கொள்கிறார்கள்.
குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல ஆரோக்கிய உரையாடலை உருவாக்குகிறது என்றுகூட சொல்லலாம். ஆனால் இதேவகையான உரையாடல்களை ஒரு புத்தகம் குறித்து அல்லது ஒரு முக்கிய புத்தகத்தின் மதிப்பு குறித்தும் நாம் விவாதிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்த அளவிற்கு நாம் தொலைக்காட்சியை குறித்து பேசுகிறோமோ அந்த அளவிற்குகூட வேண்டியதில்லை, புத்தகம் குறித்து ஒரு சின்ன பேச்சுகூட நாம் பேசுவதில்லை. இந்த பேச்சுகள் முன்பு வாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் வெளிவந்த காலங்களில் இருந்தன. இப்போது அந்த இடம் தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டது.

Monday, June 26, 2017

கும்பல் மனநிலை



தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறி பேருந்தில் பயணம் செய்யும் ஒருவரை தாக்கும் வழக்கம் முன்பு சென்னையில் இருந்தது. அந்த வழியாக நடந்து செல்பவர்கூட அவர் மேல் தாக்குதல் தொடுக்கலாம். அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்று யாரும் கேட்கப் போவதில்லை. சரியான மனிதரைதான் அடிக்கிறோமா என்கிற பிரக்ஞையும் அவர்களிடம் இருக்காது. கும்பல் மனநிலையோடு தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒருவர் செய்யும் செயல். அதன் பின்னணியில் இருக்கும் கூரூர மனநிலையைப் பற்றி ஒருவருக்கு அக்கறையில்லை என்பதே இது உணர்த்துகிறது.

Friday, June 2, 2017

தஞ்சைக் கூடலின் மே மாத இலக்கிய கூட்டம் (27/5/17)



வழக்கமாக அமையும் சிறுகதைக்கூட்டமாக இல்லை இந்தமுறை. குறிப்பாக காத்திருக்க வேண்டியிருந்தது இந்தமுறை ஏற்படவில்லை. எல்லோரும் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டார்கள். இன்று ஒர் இலக்கிய கூட்டத்திற்கு உற்சாகம்தான் தேவையாக இருக்கிறது. அதேபோல் கலந்துரையாடலின் போதும் ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்ந்தன, ஹரணி, மோகன்ராஜ், துவாரகா போன்றவர்களின் கருத்துரையாடல்களால் சம்பிரதாய இறுக்கங்கள் மறைந்து அடுத்தக் கட்டத்திற்கு (இதுவரை நடந்துவந்த கூட்டங்களையும் சேர்த்து) கூட்டத்தை கொண்டு சென்றது என்றால் மிகையில்லை.