உண்மை சம்பவத்திற்கு பழிவாங்குதல் ஒன்று நடப்பதுபோல கதை
சித்தரிப்பது ஒருவகை கதைகூறல் முறை. சம்பவம் மட்டுமே உண்மை, பழிவாங்குவது நடந்ததுபோல கதைசொல்வது. கதைவிடுவது என்று சொல்லலாம்.
ஆனால் உண்மைக்கு சமமாக இதுவும் நடந்துள்ளது என்று சொல்வது அத்தனை எளிதானது அல்ல. சம்பவங்களும்
சொல்லும்முறையும் மிக அழகாக உண்மையோடு ஒத்துபோகவேண்டும். 26/11/08 அன்று மும்பையில் தாக்குதல் நடந்தது. அதற்கு முக்கிய தீவிரவாதிகள்
3 பேர் இந்தியாவர சிலர் பாகிஸ்தானிலிருந்து அவர்களுக்கு சாடலைட்
போனில் கட்டளைகளை பிறப்பித்து 166 பேர்களை சுட்டுக்கொன்றார்கள்.
300க்கு மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இந்த சம்பவம் நடந்து அதன் குற்றவாளியான கசாப் தூக்கிலிடப்பட்டான்.
அதன் பின்னனியில் உள்ளவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்த குற்றவாளிகள்
தகுந்த பாதுகாப்போடுதான் இருக்கிறார்கள். ஹெட்லி எனப்படுபவன் அமெரிக்காவிலும், ஹபீஸ் போன்றவர்கள் பாக்.கிலும் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.