இந்தப்புத்தாண்டு
முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே
மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக
எழுதவிருக்கிறேன்.
மகாபாரதத்தை முழுமையாக ஒருவரால் படித்துவிட்டதாக சொல்ல முடிவதில்லை. வயதும் அனுபவங்களும் மீண்டும் மீண்டும் படிக்க நம்மை கோரியபடியே இருக்கின்றன. முதலில் நான் மகாபாரத்த்தை படிக்க ஆரம்பித்தபோது அதன் எதிர் எதிர் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எரிச்சல் ஊட்டியபடி இருந்தன. ஆனால் இப்போது அப்படி இல்லை, மிக நீண்ட முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய மேலும் செரிவான பகுதிகளைக் கொண்ட ஒரு மகாபாரத்தை மனம் நாடியபடி இருக்கிறது.