Monday, November 14, 2016

வலிகள் நிறைந்த வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும்

கதைகள் சாமத்தில் முனகும் கதவு - கே.ஜே.அசோக்குமார்   
ஹரணி

மூன்று முறை சந்திப்பில் எனக்கு அறிமுகம் கே.ஜே.அசோக்குமார். சிறுகதை எழுதியுள்ளதை அப்புறம்தான் சொன்னார். தொகுப்பு வெளிவந்திருப்பதையும் அதற்குப் பின்னர்தான் சொன்னார். அப்புறம் அதன் அறிமுகவிழா குறித்துப் பேசியபின் தாங்கள் அதுகுறித்து பேசவியலுமா எனக் கேட்டார். பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு புத்தகத்தைத் தாருங்கள் படிக்கவேண்டும் என்றேன். புத்தகம் வாங்குவதில் சற்று தாமதம் நேர்ந்தது. பின்னர் கிடைத்து அதுகுறித்துப் பேசுவதற்கு முன்னதாகப் படித்துமுடித்துவிட்டேன்.