எழுத்து பத்திரிக்கை ஆரம்பித்தபோது அப்போது சந்தா செலுத்தியவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்ட நாவல் இது. இதன் விலை 1969ல் ஒரு ருபாய் தான். ஒரு நீண்ட சிறுகதையைவிட சற்று பெரியது. ஒரேமூச்சில் படித்துமுடித்துவிடலாம். வேகமும் விறுவிறுப்பும் கொண்ட இந்நாவல், எர்னெஷ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் என்ற நாவலை ஒத்தது. அந்நாவலின் தாக்கத்தினால்தான் எழுதப்பட்டும் உள்ளது. வாடிவாசலில் மாடுபிடிக்கவரும் ஒருவன் தன் அப்பாவை கொன்ற அதே மாட்டை கொன்று பழிதீர்ப்பதுதான் கதை.
மாடு அணைக்கவரும் பிச்சி அவன் மச்சான் மருதன் அவர்களோடு கலந்துகொள்ளும் கிழவன் மற்றும் ஜமின்தார் இவர்களே முக்கிய கதாபாத்திரங்கள். மாடு அணையவருவதை சொல்லும் வருணனைகளும், காட்சி சித்தரிப்புகள் மிகவும் நுட்பமும் தத்ருபமானவை. ஜல்லிகட்டை தொடர்ந்து கவனித்து வரும் ஒருவரால் மட்டுமே இம்மாதிரி எழுதமுடியும். ஜல்லிகட்டின் மீதான நம் சந்தேகங்களை தீர்த்துவைத்துவிடுகிறது இந்நாவல். சி சு செ, அந்த கிழவனாக நின்று தன் அனுபவத்தை கதைமுழுவதும் கொட்டித்தீர்க்கிறார். பிச்சியின் மாட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக அழகாக கூறுவதில் அவரின் எழுத்தனுபவம் தெரிகிறது.
ஐந்தறிவு மாடும் ஆறறிவு மனிதனும் போடும் போட்டி. இது மனிதனுக்கு மட்டும் விளையாட்டு, மாட்டிற்கல்ல என்கிறார் சி சு செல்லப்பா.
- o0o -
2 comments:
வாடிவாசல் நாவலை வாசிக்கும் போது நம்மை சல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலுக்கே அழைத்து சென்றுவிடுகிறார் சி.சு.செல்லப்பா. நல்ல நாவல்.
ஆமாம்.
உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி.
Post a Comment