Showing posts with label கே.ஜே. அசோக்குமார். Show all posts
Showing posts with label கே.ஜே. அசோக்குமார். Show all posts

Tuesday, February 7, 2023

குதிரைமரம் & பிறகதைகள் தொகுப்பு குறித்து விஜயகுமார் சம்மங்கரை


 
அன்புள்ள அசோக்,

இன்று தங்களுடைய குதிரை மரம் வாசித்து முடித்தேன். வாசித்த கையோடு இந்த மடல் எழுதுகிறேன்.

அனைத்து கதைகளும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது. உங்களுக்கு மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. அனைத்து கதைகளின் முதல் பத்தியே அதற்கு சாட்சி.

குதிரை மரம் கதை தான் தங்களின் உச்சமாக நான் நினைப்பது. இனி நீங்கள் அந்த கதையை விஞ்சும் எண்ணத்தில் தான் மற்ற கதைகளை எழுதுவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மற்ற எந்த கதையிலும் இல்லாத ஆழமும் உண்மையும் அதில் தான் பொதிந்து இருப்பதாக படுகிறது.

ஒவ்வொருவருக்கும் இது தரமான கதை என்று சில அளவுகோல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை எந்த கதை நினைவில் நிற்கிறதோ அது நல்ல கதை. அது ஏன் நினைவில் இருக்கிறது என்று பிறகு ஆராய்ச்சி செய்வேன். உதாரணமாக குதிரை மரம் நினைவில் நிற்கும் கதை. காரணம் அதன் உண்மை தன்மை. அதாவது இலக்கிய மனம் அறியும் உண்மைத்தன்மை.

மற்ற கதைகளில் அது கதையாக வர வேண்டும் என்ற பிரயத்தனம் தெரிகிறது. அது நல்லதுதான். பல நல்ல எழுத்தாளர்களிடம் நான் அடையாளம் காண்பது இதுவே. ஆகையால் தங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அன்புடன்
விஜயகுமார் சம்மங்கரை



Sunday, November 27, 2022

பொம்மைகளின் உரையாடல் பற்றி கிறிஸ்டி

 



அன்புள்ள அஷோக் சார்,
 
பொம்மைகளின் உரையாடல்களிலிருந்து ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டில் எந்தளவு தெய்வ நம்பிக்கை ஊடுருவி உள்ளது என.  தெய்வ நம்பிக்கை கொண்டுதான் இந்த பூலோகவாசிகளை நல்வழிப்படுத்தமுடியும் என முன்னோர்கள் நினைத்ததால்தான் கடவுள் மதம்  என்கிற கலாச்சாரத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால் காலம் போகப்போக மனிதன் அந்த தெய்வ நம்பிக்கையைக்கொண்டே சக மனிதனை ஏமாற்றி தான் எவ்வாறு சுகித்திருப்பது எனக் கண்டுகொண்டான்.

Wednesday, May 13, 2020

சாமத்தில் முனகும் கதவு: சிறுகதை தொகுப்பு விமர்சனம் - நாகரத்தினம் கிருஷ்ணா



. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு

மனம்
அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.
மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப்பட்டதோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில்பசியாற வேட்டையாடுவதில் தவறில்லைஎன போதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு (consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை (preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.