Sunday, July 28, 2019

கலங்கிய நதி விமர்சனம் - அண்டனூர் சுரா


கற்பனை -1
 
தேச பிரதமர் - தீவிரவாதி, நக்சலைடு அல்லது அவரது கட்சிக்காரர்களால் கடத்தப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்...?. பிரதமர் நாற்காலியில் மற்றொரு பிரதமர் உட்காரும் வரை தேடுதல் பணி கிஞ்சிற்றும் தொடங்கியிருக்காது. புதியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததன் பிறகு காணாமல் போனவர் திரும்பி வந்தால், அவரது பதவி என்னாகுமென்று கணிப்பின் அடிப்படையிலேயே அவர் தேடுதல் பணியை முடுக்குவார். அதற்குள்ளாக, ஒரு சராசரி குடிமகன் இந்த உலகை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருப்பான்.

Friday, July 19, 2019

காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் - இரா.கதிரேசன்


தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டி பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.

எதார்த்த வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின் நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை, கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின.

Monday, July 15, 2019

இந்தியாவின் உப்பு வேலி

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிற பழமொழி பந்தியில் இலையில் முதலில் உப்பு வைப்பவரை நினைக்க வேண்டும் என்று இந்த பழமொழி சொல்வதாக நினைத்திருந்த காலம் ஒன்றிருந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உப்பு என்கிற பொருளைவைத்து பழமொழிகளும் சொலவடைகளும் நாளும் மனிதர்களின் நாவில் தவழ்ந்தபடிதான் இருக்கிறது. வாழ்க்கை உப்பு சப்பில்லாமல் இருக்கிறது என்று சொல்வதும் உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்று சொல்வதும் ஒரு நாளில் நிகழ்ந்துவிட்ட விஷயமில்லை.

Thursday, July 11, 2019

காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் - கலைச்செல்வி

(தஞ்சைக்கூடலின் 29/6/19 அன்று பேசிய சிறப்புரையின் கட்டுரை வடிவம்.)


தஞ்சை கூடல் இலக்கிய வட்டம் 29.6.2019 நடத்திய விழாவில்..

எழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில “தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட்டத்தட்ட முந்நுாறு பக்கங்கள் கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.

Wednesday, July 3, 2019

விகாசம் வாசிப்பனுபவம்



நவீன வாழ்வின் மாறுதல்களும் அது தருகின்ற மயக்கங்களும் அதனால் மனிதர்களுக்கு உண்டாகும் சஞ்சலங்களை பிரதிபலிக்கிற கதைகளில் முக்கியமானதாக சுந்தரராமசாமியின் விகாசம் சிறுகதையை குறிப்பிடலாம். கூடவே சிறுகதையின் வடிவத்தைப் பற்றிய நம் எண்ணத்தை மீறி ஒரு அழகிய வாழ்க்கைப் போக்கை மிக குறைந்த வார்த்தைகளில் சொல்ல முடிவது இக்கதையின் சிறப்பு.

Monday, July 1, 2019

இடம்பெயர்வின் துயரம்: காஃப்காவின் நாய்க்குட்டி



1

பெருநகரத்தில் தனித்துவிடப்படவனின் சஞ்சலங்கள் போன்ற தீராத மனவாதை பிறிதொன்றில்லை. ஓய்வில்லாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் புலம்பெயர்ந்து கள்ளவழிகளில் ஐரோப்பிய நகரங்களில் வாழும் மனிதர்கள் அடையும் பெரும் கலக்கங்கள் விவரிக்கவியலாத தனிமனித கலக்கங்கள். மற்ற நபர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே முடியாத அனுபங்களை என்ன செய்ய முடியும். அவைகளை எங்கே கொண்டு கொட்ட முடியும். வாழ்நாள் முழுவதும் இருக்கும் இந்த துக்கம், மனிதர்கள் தங்களின் அடையாளமாகவே ஆகிப்போனததன் அடையாளமற்ற வாழ்க்கையை என்ன செய்வது.