Monday, August 8, 2016

அல்லோலபதி மருத்துவம்



பலவகை மருத்துவங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி, நாட்டு மருத்துவம், கைமருத்துவம் என்று அவரவர்களுக்கு தேவைக்கும் அவசியத்திற்கும் பொருத்து இந்த மருத்துவங்கள் பயன்பட்டன. நோய் தீர்வுக்காக ஒன்றுக்கொன்று உறவாடிக் கொண்டன. விட்டுக் கொடுத்துக் கொண்டன. இன்று ஒரே மருத்துவம்தான் அது அலோபதி என்று சொல்லப்படும் ஆங்கில மருத்துவம் மட்டும்தான்.. இன்றும் மேற்ச்சொன்ன மருத்துவங்கள் இருந்தாலும், அது கடைசி தீர்வாகவோ, இதையும் முயன்று பார்க்கலாம் என்றோ, அல்லது இல்லாதவர்களின் பிரியமானதாகவோதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு வேண்டுமென விரும்புகிற மக்களுக்கு மட்டுமல்ல, நம்பகமான மருத்துவமாக அலோபதிதான் திகழ்கிறது.
ஏன் அலோபதிதான் சிறந்த மருத்துவமாக இருக்கிறது? பலவகையிலும் செலவுபிடிக்கிற, பகற்கொள்ளையர்களாக செயல்படும் அல்லோபதி டாக்டர்களை மக்கள் தினம் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். சின்ன விரல் வலியிருந்து பெரிய நெஞ்சுவலிக்கு என்று எல்லாவற்றிற்கும் அதைத்தான் நாடுகிறார்கள். குணமாகுமா இல்லையா என்பதைத்தாண்டி அதனிடம் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது. அதுஒரு பெரிய தொடர் செயல்பாட்டை கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு கூட்டு இயக்கமாக உலகம் முழுவதும் பரயிருக்கிறது.. அதன் நம்பகதன்மை அதுவாகத்தான் இருக்கும்.