இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைப்பாடுதோ என்று ஒரு பாடல்
80லில் பிரபல்யமாக இருந்தது. அந்த படத்தில் நடித்தவரும் ஒரு சிங்களப் பெண். படப்பிடிப்பு இலங்கையில்
நடந்துள்ளது. எழுபதுகளிலும்கூட பல படங்களில் ஒருவரை காட்டி இவர் இலங்கையில் (சிலோனில்) இருந்தவர், அங்கு வியாபாரம் செய்கிறார் என்று ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி
இப்படி சொல்வதாக இருக்கும். பாடல்களில் கொழும்பு, மட்டகளப்பு, இளநீர் என்ற வார்தையெல்லாம் இருக்கும். கமல் நடித்த புன்னகை மன்னனில்
சிங்கள நண்பர்கள் வருவார்கள். யுத்தம் வந்தபின் இலங்கை சம்பந்தமான எந்த விஷயமும் இடம்பெறுவதில்லை.
கவனமாக தவிர்க்கப்படுகிறது. அல்லது அரசியல் நிர்பந்தம் எதுவும் ஏற்படும் என்கிற பயமும்
இருக்கலாம்.
ஆனால் ஒரு மலையாளப் படம் இலங்கை மண்ணின் பின்னனியில் எடுக்கப்பட்டிருந்ததை
டிவியில் ஒளிப்பரப்பும்போது காணமுடிந்தது. மலையாள மக்கள் இலங்கையில் இணக்கமாக இருப்பதாக
தெரிகிறது. இலங்கை தமிழர்களில் 50% மலையாளிகள்தான்.
என்பதுகளின் ஆரம்பம் முதல் 2000 வரை
எந்த தமிழ் படத்திலும் இலங்கையின் பின்னனியும் அல்லது இலங்கை சம்பந்தமாக எதுவும் இல்லை
என்பதை காணலாம். தெனாலி, கண்ணத்தில்
முத்தமிட்டாள் போன்றவைகள் கொஞ்சம் சொல்லலாம் அதன்பின்னும் அதிகம் இல்லை. சிங்கம் படத்தில்
ஒரு சிங்களர் வருவதை தவிர பெரியதாக எதுவும் இல்லை.