Thursday, August 16, 2012

21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்



ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக திரு கீரனூர் ஜாகிர்ராஜாவின் தொகுப்பாக 21 சிறுகதைகள் இந்த 12 ஆண்டுகளில் வந்தவைகளை தொகுத்து 21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் என்ற பெயருடன் வெளியாகிறது. இதே போல
காதல் கதைகளும் தொகுப்பாக அழியாத கோலங்கள் என்ற பெயரில் வெளியாகிறது. 21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பில், எஸ்.செந்தில்குமார், காலபைரவன், சந்திரா, லக்ஷ்மி சரவணகுமார், கணேசகுமாரன் மற்றும் பல எழுத்தாளர்களுடன் என் சிறுகதை சொல்வனம் இதழில் வெளியான 'சாமத்தில் முனகும் கதவு' தேர்வு பெற்றுள்ளது.



வெளியீட்டு விழா

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை - 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

நேரம்: மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை

21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்
 

இருபத்தியோரம் நூற்றாண்டு தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு

வெளியிடுபவர் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி
பெறுபவர் எழுத்தாளர் தி. பரமேஸ்வரி

அழியாத கோலங்கள்
 

தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள்
தொகுப்பாளர் - கீரனூர் ஜாகிர்ராஜா

வெளியிடுபவர் - பாரதி கிருஷ்ணகுமார்
பெறுபவர் இதழாளர் கவின் மலர்

வரவேற்புரை - செ.ச.செந்தில்நாதன், பதிப்பாளர் - ஆழி பப்ளிஷர்ஸ்
ஏற்புரை - எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா

அனைவரையும் வருக என வரவேற்கிறேன்.


தேர்வு செய்த திரு.ஜாகிர்ராஜைவுக்கும் வெளியிடுகின்ற ஆழி பதிப்பகம் திரு.செ.ச செந்தில்நாதனுக்கும், என் கதையை வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் திரு. வ.ஸ்ரீனிவாசன் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


சொல்வனம் கதையின் லிங்க்:

http://solvanam.com/?p=19274

_o0o_

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_2131.html) சென்று பார்க்கவும்...

நன்றி…

கே.ஜே.அசோக்குமார் said...

மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்