எழுத்தாளர் சுஜாதா கூறும் சிறுகதைக்கான யோசனைகள் கொஞ்சம் பிரபலமானவை, இலக்கிய எழுத்துகளுக்கு இவைகள் பெரிதும் பயன்படப் போவதில்லை என்றாலும் வெகுஜன எழுத்துகளுக்கு பயன்படும். குறிப்பாக 8வது விதி, இது இலக்கிய எழுத்துக்களுக்கு சுத்தமாக பயன்படாது. மற்றபடி படித்துப் பார்க்கலாம்.
2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய்ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரிவீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டிஆசிரியருக்குக் கடிதம்எழுதக் காத்திருக்கும்.
3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள்வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள்சொந்த ஊர், சொந்த வீதி…
4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சிசெய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்துஎழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.
5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத்தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்துநாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.
6. ஒரு வார்த்தையைஒரு கதையில் ஒரு முறைக்கு மேல்பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்தபரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள்மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்றவார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.
7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச்சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோபெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப்பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின்அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர்வைப்பது அல்ல.
8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதேகதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச்சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.
9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது.எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ்சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும்மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
சிறுகதையின் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு நம் மனம் எப்போதும் ஏங்கியபடியே இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ பிரபலமான எழுத்தாளர் கூறியதை கவனித்தபடி இருக்கிறோம். அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt vonnegut) கூறிய 8 விதிகளை இப்போது பார்ப்போம். இணையத்தில் கிடைத்த அந்த விதிகள் இதோ.
வானகட் கூறுகிறார்:
சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:
1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!
2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் - குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!
4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் - பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!
5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!
6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!
7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!
அவளுடையவீடுரயில்வேகுவார்ட்டஸ்தண்டவாளங்களுக்குபக்கத்திலேயேஇருந்தது. தாழ்வாகஒன்றன்பக்கத்தில்ஒன்றாகஅமைதியானசூழ்நிலையில்அமைந்தவீடுகள், ரயில்கள்போகும்நேரங்கள்தவிரமற்றநேரங்களில், காகங்கள், குயில்கள்போடும்சத்தங்கள்தான்கேட்கும். அந்த ரம்மியமான சூழ்நிலையை நினைக்க இப்போதும் இனிமையாக
இருக்கிறது.ரயில்கள் எப்படி ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றொரு
தண்டவாளத்திற்குபோகின்றன என்று
ஆர்வமாக அவளிடம் கேட்டிருக்கிறேன், அவளுக்கு பழசாகிப் போனவிசயமானதால், சினிமா, கிசுகிசு போன்ற
வேறு சுவாரஸ்யமான விசயங்களே பேசுவாள்.
பள்ளிக்கு வரும்போது
அமைதியாக வருவாள்போகும்போது அவள்
செய்யும் அளும்பு தாங்கமுடியாது.அப்போது தாவனியை
ஒத்தையில் அணிந்து செல்வாள். ரவிக்கையின் கட்டு மிக கிழே இறங்கி இறுக்கமான சதை
பிளவை மெல்லிய தாவணி வெளிக்காட்டியபடி இருக்கும்.வெளியே வந்ததுமேஅவள்
வெளிப்படையாக பேசும்வார்த்தைகளும் செய்கைகளும் எங்களுக்கு அதிர்ச்சியை
அளித்தாலும் ரசிக்கவேசெய்தோம்.எல்லாத்தையும்
வெள்ளேத்தியாக எல்லோரிடமும் கூறிவிடுவது அவள் வழக்கம்.யார் பக்கத்தில் இருக்கிறார்கள் இல்லை என்பதை அவள் கவனிப்பதில்லைகுவார்ட்டஸில் இருக்கும் ஒரு பையனோடு ஏற்பட்ட பழக்கத்தை ஒருநாள் கூறும்போது
அதிகமாகவே அதிர்ச்சியாக இருந்தது. அது சாதரணமாக காதலாகவோ நட்பாகவோ இருந்திருந்தால்
பெரியதாக தோன்றியிருக்காது. அதைவிட அதிகமானது எனக் கூறக்கேட்டதும் என்ன
சொல்வதென்றே தெரியாமல் இருந்தோம். ஆனால் அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஒருநாள் பஸ்ஸில் வந்து இறங்கும்போது ஒரு பையனை அறிமுகப் படுத்தினாள். என்னவோ
ஒரு பெயரை சொன்னாள். அவனை பார்த்ததும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மாமா
ஒருவர் தன் பையனை திட்டும்போது 'காடுப்பயலே' என்று திட்டுவார். அதன் அர்த்தம் அவனைப் பார்த்தபோது தோன்றியது. நல்ல
உயரத்தில் கட்டுமஸ்தான பெரிய ஆள் மாதிரியிருந்தன். அவசர அவசரமாக விலகிஓடியது
நினைவிருக்கிறது.அப்படி அவனிடம் என்ன கண்டுவிட்டாள் என்பது தெரியவில்லை.
மிட்-டெர்ம் தேர்விற்காக குழுவாக உட்கார்ந்து விவாதித்து கொண்டிருந்தபோது, கைபிடித்து இழுந்து
தனியே அழைத்துச் சென்றாள். மிகமுக்கியமாக பாடத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது
அவள் இப்படி செய்தது எரிச்சலாக இருந்தது. ஒரு கழிவறைக்கு பக்கத்தில் நிற்கவைத்து
கண்டதையும் பேசிக்கொண்டிருந்தாள்.நிலைகொள்ளாமல் இப்ப என்னவேணும் உனக்கு என்றேன். 'தள்ளிப் போயிருக்குபா' என்றாள். 'என்ன?', ‘ஆமா, மூணுமாசமா இருக்குப்பா' என்றாள். என்ன
கூறுகிறாள் என்பதை புரிந்துகொள்ள சிலநிமிடங்கள் ஆகியது. அவள் முகத்தில் எந்த
சலனமும் இல்லை. உண்மை சொல்கிறாளா அல்லது விளையடுகிறாளா என்று கண்டுகொள்ளவும்
முடியவில்லை. நடந்து செல்லும் வேறு பெண்கள் காதில் விழுந்துவிடக்கூடும் என்ற பயமில்லாமல்
உளறிக்கொண்டிருந்தாள். அந்த இக்கட்டான சூழ்நிலையை அருவருப்பாக உணர்ந்தேன்.
'இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்ற, உங்கமாகிட்ட போய்
சொல்லு'
'அது... சொல்லமுடியாதுப்பா ' என்றாள்.
'என்னமோ செய், எனக்கு தெரியாது' என்று போய்விட்டேன்.
அம்மாவிடம் சொல்லிவிட்டதை வந்து சொல்வாள் என்று இருநாளாக நினைத்துக்
கொண்டிருந்தேன்.
அவள் எப்போதும்போல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க கூடாது, பேசக் கூடாது
என்றேண்ணியிருந்தேன். ஆனால் மனசு கேட்காமல் அவளிடம் சென்று 'என்ன சொன்னியா' சென்றேன்.
லேசாக கண் கலங்கினாள். கையால் கண் ஓரங்களை தாவணியால் துடைத்தாள். அவனை
கல்யாணம் கட்டிக்கலாம் என்கிற அவள் நினைப்பு மாறிப்போயிருந்தது.அவளிடம் என்ன சொன்னாலும் புரியாதுபோல் தோன்றியது. நாட்களை கணக்கிட போது மே
அல்லது ஜூனில் பிரசவம் இருக்ககூடும் என நினைத்தேன்.
'அப்பா வயித்த தள்ளிக்கிட்டு வந்து
பரிச்சை எழுதப் போறியா' என்றேன்.
சட்டென தலை தூக்கி 'ஏன் எழுதுனா என்ன' என்றாள்.
ஓங்கி அறையலாம் போல் இருந்தது. 'சீ... போடி' என்று எழுந்து போய்விட்டேன்.
மாலை ஆவளுடன் பஸ்சில் என் வீட்டையும் தாண்டி அவள் வீடுவரை சென்றேன். 'எங்க வீட்டுக்கா வர்ற' என்று கேட்டுக்
கொண்டிருந்தாள். 'எல்லா வேறு ஒருத்தர் வீட்டுக்கு போறேன், அப்படியே உங்க வீட்டையும்
பாத்துடலாமே' என்று அவளுடனேயே சென்றான்.
அவள் வீடு போனபோது அவள் அம்மா கடலை தின்றுக் கொண்டிருந்தார். எப்படி
கூறுவதென்று தெரியாமல் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து, கூறிவிட்டேன். முதலில் புரியாமல்
முழித்துவிட்டு திடிரென மயக்கம் வராத குறையாக கடலை பொட்டலத்தை தூக்கிப்
போட்டுவிட்டு தரையில் அமர்ந்துவிட்டார். 'என்னம்மா சொல்ற' கண்கள் கலங்கி ஒரு
மாதிரி ஆகிவிட்டார். 'என்னடி இது' என்று அவளிடம் கேட்க உம்மென்ற முகத்துடன் 'ஆமாம்' என்றாள். அவள் தங்கையும் கூடவே
அவளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று அவள் வீட்டில் என்ன நடந்ததோ தெரியவில்லை. மறுநாள், நான் வந்து
சொல்லிவிட்டதற்காக கோபப்படுவாள் என நினைத்தேன். ஆனால் எப்போது போலவேயிருந்தாள்.
மாலை அவள் அம்மாவும் அத்தையும் வந்து விட்டார்கள். அந்தப் பையன் ஓடிவிட்டதாகவும், அவர்கள் வீட்டில்
சென்று கேட்டதற்கு அடிக்க வருகிறார்கள் என்றும், அவர்கள் பேச்சில் புரிந்து கொள்ள
முடிந்தது. கருகலைப்பிற்கு அவள் சம்மதிக்க வில்லை. 'நீ சொல்லம்மா' என்பதுதான் அவர்கள்
வேண்டுகோள். முடிந்தவரை எடுத்துக்கூறினேன்.இந்த தேர்வு மிக முக்கியமானது, மற்றதையெல்லாம்
அப்புறம் முடிவு செய்துகொள்,நாளை கடத்தாதே என்றேன். பேசாமல் நின்றாள். 'நா அவகிட்ட நாளைக்கு பேசுறேன், நீங்க அழைச்சுக்கிட்டு
போங்க' என்றேன்.
'அடுத்த நாள் அவளிடம்
நீ பண்ணப்போற இந்த காரியத்தால உங்க குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம்
யோசிச்சுப்பாரு உங்க அப்பா அம்மாவுக்கு எவ்வளவு தலைகுனிவு, நா சொன்னமாறியே அவன்
ஒடிப் போயிட்டான் பாத்தியா, இனிமேலும் அவன் மேல நம்பிக்கை வைச்சிருக்கியா' நீண்ட இடைவெளிக்குப்பின், கடைசியாக அவள் ஒத்துக்கொண்டு போனாள். கண்கள் கலங்கியிருந்ததுபோல் இருந்தன.எப்போதும் இருக்கும் துள்ளல் குறைந்துபோய் எழுந்து போனாள்.
அவள் எடுத்துக் கொண்ட 15 நாள் விடுமுறையை மலேரியா, பேதி என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிவந்தோம்.15 நாள் கழித்து வந்தபோது, அவள் முகம் வெளுத்திருந்தது. அவள் விசயம் தெரிந்த இரண்டொரு பெண்கள் அவளை
சூழ்ந்து ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.நானும் பேசினேன், என் கண்களை சந்திக்க
அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது. பின்னாலில் சிங்காரிப்பதில் அவள் ஆர்வம் குறைந்து, படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
சுனிதா நீங்களாக, மற்ற பெண்கள்கூடிப் பேசும்போது அவளைப்பற்றிய வார்த்தை இல்லாமல் இருப்பதில்லை.
அவளைப் பற்றிய பேச்சு இல்லையென்றால் அப்பேச்சு சுவாரஸ்யமாக அமைவதில்லை. அதில்
முக்கியமானது அவள் வருங்காலத்தைப் பற்றியது.
‘இனிமே குழந்தை
பெத்துக்க முடியாதம்பா, ரொம்ப சின்ன வயசிலேயே கலச்சிட்டதால, இருதய பிரச்சனை இருக்கிறதால இன்னிமே குழந்த பெத்துக்க முடியாதம்பா, அப்படியேஉண்டானாலும் அது அவ உயிருக்கு ஆபத்தாம்பா' என்று விஜயா நீளமாக
கூறிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பற்றிய விசயங்கள் சுவாரஸ்யம் இழப்பதற்கு கொஞ்ச நாள் ஆகியது.
கூட்டு படிப்பிற்காக விஜயாவுடன் சுனிதா விட்டிற்காக வந்தபோது அவளின் அன்றைய
பேச்சு மிக அந்தரங்கமாக அவள் மனக்குறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.‘இனிமே நா குழந்தையே
பெத்துக்க முடியாதாம்பா' என்பதுதான் அதில் முக்கியமான விசயம். சாதாரணமாக சமாதானப் படுத்திவிட
முடியவில்லை. 'இப்போதைக்கு படிப்பில் கவனமாயிரு, பின்னாடி அதைப்பத்தி யோசிச்சிக்கலாம்'. என்று அவள் மனதை திசைதிருப்ப
மட்டுமே முடிந்தது.இந்நிலையிலும் விஜயா 'நா இவகூட படிக்கிறேன்னு எங்கம்மாகிட்ட சொல்லிறாதப்பா' என்றாள். அனைத்தையும் அவள்
அம்மாவிடம் கூறிவிட்டிருக்கிறாள். 'இதுதான் என்வேல பாரு, நீ வந்தது எங்கம்மாகூட கதையடிக்க, அதைப்போயி செய்யி'
கானாமல் போன அந்தபையன் அடுத்த வருடமே அவளை பின் தொடர்ந்தான். 'அவன் பின்னாடியே
வாறாம்பா அவன போ சொல்லுப்பா' ஒருநாள் என்னிடம் வந்து கூறிக்கொண்டிருந்தாள். பஸ் ஸ்டாப்பில் வைத்து
அவனைப்பார்த்த போது முன்னிலும் கம்பீரமாகிவிட்டதுபோல் தெரிந்தது.நாங்கள் போன பஸ்ஸிலேயே இரண்டுநாள் எங்களைபின் தொடந்து வந்தான். மூன்றாம் நாள்
வந்தபோது முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டோம். அவனும் இறங்கினான்.
நேராக அவனிடம் சென்று 'ஏன் அவ பின்னாடியே வரீங்க உங்களுக்கு வேற வேல இல்லையா'
அப்ப பிரச்சனை வரும்போது எங்க போயிருந்திங்க, அவ இனிமேலாவது
நல்லாயிருக்கட்டும்,
அவள இனிமே தொந்தரவு பண்ணாதிங்க' என்று கூறி விறுவிறுவென்று அவளை அழைத்து வந்தேன்.
'என்னப்பா இப்படி
பேசிட்ட, அவன் முரடன்பா,
ஒன்னைய அடிச்சாலும் அடிப்பான்'.
'இனிமே அவன்
ஒம்பின்னாடி வரமாட்டான் பயப்படாதே' என்றேன்.
பள்ளிப்படிப்பு முடியும் வரை அவன் வரவேயில்லை. அப்பாவிற்கு மாற்றலாகி வேறு ஊர்
வந்துவிட்டோம். அப்புறம் அவளிடம் தொடர்பேயில்லை. அப்பாவின் அலுவலகம் மூலமாக் இந்த
ஊர் விலாசத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கல்யாணத்திற்கு எப்போதும்போல் அப்பா வரவில்லை. நானும் அம்மாவும் மட்டும்
சென்றோம். எங்களை கண்டதுமே சுனிதாவின் அம்மாவிற்கும் அத்தைக்கும் சந்தோஷம்
தாளவில்லை. அவள் அம்மாவிற்கு வெள்ளைமுடி அதிகமாகிவிட்டிருந்தது. அத்தை கண்ணாடி
போட்டு வேறுமாதிரி ஆகியிருந்தார்.அவர் மகனைத்தான் திருமணம் செய்கிறாள் சுனிதா.
கொஞ்ச நேரம் பேசியபின் 'சுனிதா அந்த ரூமிலே இருக்கா, போய் பாரும்மா' என்றார். மணப்பெண் அறைக்கு சென்றபோது, நெத்திசுட்டி பில்லாக்கு வைத்து
பாவாடை ரவிக்கையுடன் நின்று கொண்டிருந்தாள் சுனிதா. அவளுக்கு புடவை உடுத்திக்
கொண்டிருந்தாள் ஒரு பெண்.
என்னைப் பார்த்துமே பெரிய திறந்த வாயுடன், 'ஏ... எப்ப வந்த' என்றாள், சேலை கட்டுபவளுக்கு ஈடுகொடுத்தபடியே என்னிடம் பேசிக்
கொண்டிருந்தாள்.இன்னும்
அழகாகிவிட்டிருந்தாள். சற்று பெருத்து முடிநல்லஅடர்த்தியுடன் லச்சணமாக மாறியிருந்தாள். அவள்
அலங்காரத்திற்கு கொஞ்சம் உதவி செய்துவிட்டு, 'சரி நா வெளியில போய் உட்காந்திருக்கேன்' என்றுகூறி கிளம்பினேன். [உயிர் எழுத்து இதழில் வெளியான கதை]-o0o-