Friday, March 5, 2010

சாயாவனம் - சா.கந்தசாமி

சா.கந்தசாமி எழுதிய சாயாவனம் என்கிற இந்த நாவல் எளிய சொற்களில், நுண்ணிய தகவுல்களுடன் அமைந்த சிறிய நாவல்.

உயிருக்குயிராய் பழகும் மக்கள், படிப்பும் பணமும் வந்ததும் அவர்களுக்குள் ஏற்படும் சிறுவிரிசலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சலிப்பும் ஆவேசமும் கொள்கிறார்கள், அதை இந்நாவலில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் சா.கந்தசாமி..

ஒரு சிற்றூரில் கரும்பு ஆலையை நிறுவுவதில் மக்கள் கொள்ளும் உவகை, கட்டிமுடிந்தது அதனால் ஏற்படும் வெற்றிடத்தால் மக்கள் கொள்ளும் சலிப்புடன் முடிகிறது. தமிழகத்தில் அல்லது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூகத்திலும் வெற்றிடங்கள் ஏற்பட்டபடியே இருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் அதன் அடுத்தகட்டத்திற்கு செல்லும்போது மக்களின் மனங்களில் ஒரு இடைவெளி ஏற்பட்டு தீராத பிரிவையே உண்டாக்கி வருகிறது. சாயாவனம் சாய்ந்தபோது இந்தியாவில் உள்ள கிராமங்களின் நிலையே நினைவிற்கு வந்தன.

- o0o -

No comments: