Thursday, August 20, 2009

அறிமுகம்

எழுது. எழுத்தே அதன் ரகசியம். - சுந்தர ராமசாமி.

எழுதுவதென்பது வாசிப்பு திறன் கொண்ட அனைவருக்கும் மிக உவப்பான செயல். அதிலும் மற்றவகளிடமிருந்து பெறும் அங்கீகாரம், அவ்வெழுத்தின் மீதான நம் நம்பிக்கையை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்கிறது. அங்கீகாரத்தின் பலநிலைகளின் ஒன்றாக இப்பிளாக்கை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எனக்கு நானே கூறிக்கொள்ளும் மனன செய்யுளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எதுவாகினும் அது உங்கள் கையில் உள்ளது. எத்தனை பேரை சென்றடையும் என்று தெரியாது. ஆனால் சென்றடையும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் மனஎழுச்சி கொள்ள வைக்குமெனில் அதுவே நான் பெற்ற பெரும் அங்கீகாரம்.

இச்சிறு அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறேன், வாருங்கள் சேர்த்து பயணிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

கே.ஜே. அசோக்குமார்.

2 comments:

Sundaram Ramachandran said...

The introduction about yourself makes a very interesting reading. I am not as proficient as you are in Tamil. However, I fully endorse your expectation that whoever joins this group will find himself/herself highly inspired.
Ram

KILLERGEE Devakottai said...

எழுதுங்கள் எழுத்தே உம்மை எழுச்சி கொள்ள வைக்கட்டும்.
- கில்லர்ஜி