Showing posts with label குதிரை மரம். Show all posts
Showing posts with label குதிரை மரம். Show all posts

Thursday, April 6, 2023

குதிரை மரம் சிறுகதை தொகுப்பு பற்றி - பா. ராஜேந்திரன்



அன்புள்ள
திரு அசோக்குமார்,

இன்று உங்கள் குதிரை மரம் & பிற கதைகள் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய 90 புத்தகங்களுள் ஒளிந்திருந்து இப்போதுதான் வாசிக்கச் சிக்கியது.

எந்த பரிந்துரையின்படி வாங்கினேன் என்று நினைவில்லை. எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதையிலேயே ஒரு அற்புதமான படைப்பினுள் நுழைந்தது தெரிந்தது. அனைத்து கதைகளும் அதே உயர் வாசிப்பனுபவத்தைத் தந்தன. எதிர்பாராமல் அமையும் நல்நிகழ்வு தரும் பரவசம் இன்னும் மீதமுள்ளது. சரளமான மொழிநடை. இயல்பான உரையாடல்கள். நுணுக்கமான பாத்திர படைப்புகள். கூரிய வாழ்க்கை அவதானிப்புகள்.

அதிலும் சிகரமாக குதிரைமரம் குறுநாவல். குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான பொருளை ஈட்ட இயலாத குடும்பத் தலைவனின் அவலம், படைப்பில் இருந்து உற்பத்திக்கு மாறும் உலகில் உண்டாகும் சமூக சீர்குலைவு, கணவனின் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் இடையே ஊசலாடும் மனைவி என் பல தளங்களில் சஞ்சரிக்கிறது. படைப்பாளியின் படைப்பூக்க மகிழ்ச்சியும் வீழ்ச்சியும் தந்தை மகன் ராமர் கதை மூலம் மனம் தொடுகிறது. எவ்வளவு ஆழமான நுணுக்கமான சித்தரிப்பு. வறுமையிலும் பசியில் வாடாமல் காக்கும் விலையில்லா ரேஷன் அரிசி, வறுமையிலும் பீஸ் வாங்கும் பள்ளியில் பசங்க படிப்பது என ஒரு வரியில் வந்து செல்லும் செய்திகள் பல.

Thursday, November 3, 2022

குதிரை மரம் பற்றி - ‍குமார நந்தன்


கே.ஜே. அசோக்குமாரின் குதிரை மரம் சிறுகதையை கடந்த சொற்சுனை கூட்டத்திற்காக சிவப்பிரசாத் தேர்ந்தெடுத்திருந்தார். 

படித்தவுடனே கதையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்ப நிலையால் முடியவில்லை. இப்போதுதான் எழுதுகிறேன்.
கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கதை, எழுத்தாளன் என்ற நிலைமைகளைத் தாண்டி இக்கதையை அவர் எழுதி இருக்கிறார் என எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கதையில் அவ்வளவு உயிரோட்டம்.
ஒரு நெசவாளியின் துயர் மிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்துவிட வேண்டும் என அர்ப்பணிப்புடன் எழுதி இருக்கிறார்.

Thursday, March 24, 2022

தொழில் தெய்வம்

நலமா அஷோக். உங்களின் குதிரை மரம் சொல்வனத்தில் வெளியானபோதே படித்து இருந்தேன். இப்பொழுது நூலகத்தில் இருந்து வெங்கட்ராம் அவர்கள் எழுதிய வேள்வித்தீ எடுத்து படித்தேன். அதுவும் பட்டு நூல்காரங்க என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் கதை. அதனால் மறுபடியும் குதிரை மரம் படித்தேன். பட்டு நெசவின் நுட்பங்கள், நூலிற்கு சாயம் ஏற்றுவது, கட்டைகளில் சுற்றுவது இவைகள் எல்லாம் சரியாய் புரியாமல் இருந்தாலும் இயல்பாய் வாசிக்க முடிந்தது. எல்லா துறைகளிலும் வேலையை வேலையாய் செய்யாமல் கலையாய் எண்ணிக் கொள்பவர்களுக்கு வரும் சிக்கல்கள்.

Friday, March 18, 2022

குதிரை மரம் & பிற கதைகள் - சுரேஷ் சுப்பிரமணி


எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் பல இணைய இதழ்களில் கதைகள் எழுதி வருபவர். தஞ்சைவாசி. இவரின் முதல் தொகுப்பான 'சாமத்தில் முனகும் கதவு' அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிறப்பான தொகுப்பு. இந்நூல் இவரின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.

இதில்,

1. தற்கொலை முகம்.

2. மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்.

3. கருடனின் கைகள்.

4. ஓசைகள்.

5. கணக்கு.

6. புரியாதவர்கள்.

7. அலர்.

8. எஞ்சும் இருள்.

9. பாம்பு வேட்டை

என்ற ஒன்பது சிறுகதைகளும்,

10. குதிரை மரம்.

என்ற குறுநாவல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது