இந்த மாதக் கூட்டம் எப்போது போன்ற ஒன்றாக அமையவில்லை. எங்களின் புரிதல்களை ஒரு படி மேலாக ஆக்க உதவியிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமே என்பதை தாண்டி கூட்டத்தை எப்படி நடத்துவது என்கிற திட்டம் எதுவுமில்லாமல் இருந்தோம். இனி வரும் நாட்களில் அப்படி இருக்க முடியாது.
எஸ்.செந்தில்குமார் வருவதாக இருந்தார். கடைசி நேரத்தில் வேறு ஒரு கூட்டதிற்கு செல்லவேண்டிய நிர்பந்தம் அவருக்கு, ஆகவே வரவில்லை. அண்டனூர் சுரா சற்று தாமதமாக வருவதாக சொல்லியிருந்தார். அவருக்கிருந்த வேலையால் வரமுடியாமல் போய்விட்டது. நா.விச்வநாதன், ஹரணி, ந.பிரகாஷ் மற்றும் நான் என்று வரிசையாக பேச ஆரம்பித்தோம். ஜூன் மாத இலக்கிய இதழ்களில் வந்துள்ள கதைகள் தாம் பேசுபொருள்.