ரூஹ் என்னும் ஆன்மாவை வழிநடத்த நமக்கு தெரிந்ததென்று எதுவுமில்லை. ஆன்மாவின் வழியில் நடக்கும் எதுவும் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஆன்மா சென்றடையும் இடங்களில் அர்த்தங்கள் தெரிக்கும் வாழ்க்கை இருக்கிறது. ஆழத்து கடல்போல இருக்கும் நாமறியா உலகம் நமையறியும் ஒரு காலமும் வருகிறது. சோர்ந்தழைந்து பொருள் சேர்க்கும் வாழ்க்கையில் பொருளறியும் காலமும் ஒருமுறை வந்துவிடுகிறது. பலபடிகளை கடந்து மேலேறிவரும் ஒரு உயிரின் மீதான பாதாளத்தின் அழைப்பு தான் லக்ஷ்மி சரவணக்குமார் எழுதியிருக்கும் ரூஹ் நாவல்.
