Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

Tuesday, March 22, 2011

சுஜாதாவின் சிறுகதைகள்: ஜெயமோகன் விமர்சனம்




உயிர்மை பதிப்பகமாக வந்திருக்கும் சுஜாதாவின் தேர்தெடுத்த சிறுகதைகள் நூலினை அலசி ஆராய்ந்து தொங்கவிடப்பட்ட ஜெயமோகனின் விமர்சனம் இது.

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:
  1. சுருக்கம்
  2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு
சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:
  1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
  2. குறைவான கதைமாந்தர்
  3. சிறிய கால அளவு
  4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்
அவரது கதைகளின் பலம்:
  1. வலுவான வடிவ உணர்வு
  2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.
சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:
  1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
    • ஒரே ஒரு மாலை
    • வழி தெரியவில்லை
    • சென்ற வாரம்
  2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
    • அம்மா மண்டபம்
    • கள்ளுண்ணாமை
    • கால்கள்
    • கரைகண்ட ராமன்
சுஜாதாவின் தொடக்கம்
  1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
  2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
  3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.
அவரது கதைகளின் வகை.
  1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
    • மகன் தந்தைக்கு
    • வீடு
    • சிலவித்தியாசங்கள்
    • செல்வம்
    • எல்டொராடோ
    • ரேணுகா
  2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
    • பார்வை
    • ரஞ்சனி
    • நீர்
    • நிபந்தனை
    • நிதர்சனம்
    • சாரங்கன்.
  3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
    • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் குதிரை இவ்வகையை சார்ந்தது.
    • மாமாவிஜயம்
    • சார் இந்த அக்கிரமத்தை
  4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
    • நகரம்
    • முரண்
    • நிலம்
    • நொ ப்ரொப்ளாம்
    • எப்படியும் வாழலாம்
    • பாரீஸ் தமிழ்ப்பெண்
சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்
  1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
  2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவைஅழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
  3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

_o0o_

Thursday, April 29, 2010

நகரத்திற்கு வெளியே - சிறுகதை தொகுப்பு


விஜய் மகேந்திரன் எழுதியள்ள சிறுகதைகளின் தொகுப்பு 'நகரத்திற்கு வெளியே'. இது அவரது முதல் சிறுகதை தொகுப்பாக இருக்கும். மிக குறைந்த சிறுகதைகளை (10 சிறுகதைகள்) கொண்ட இத்தொகுப்பு எல்லா சிறுகதை ஆசிரியர்களின் முதல் தொகுப்பு போல குறைநிறைகளை கொண்டுள்ளது. சில சிறுகதைகள் கதைகளாக உருகொள்வதற்கு முன்பாகவே கீழிறங்கிவிட்டதாக தோன்றினாலும், வேறுசில கதைகள் நல்ல தரத்துடன் உள்ளன. குறிப்பாக ‍‍புயல்மழை சின்னம், நகரத்திற்கு வெளியே, சனிபெயர்ச்சி போன்றவைகள். அவைகள் கூட ஜனரஞ்சக தளத்தில் இருப்பதாக சில சமயம் தோன்றினாலும், கதைகளனும் அதன் திருப்பங்களும் மிக புதியவையே. நகரத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் இக்கதைகளை நாம் எங்கே செல்கிறோம் என பதபதைக்க வைக்கினறன. ஒரு நல்ல தொகுப்பு. 
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் வெற்றிகளை பெற விஜய் மகேந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்.