கரோனாவிற்கு பின்னான நெருக்கடி என்று ஒருபுறமும் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றொரு புறமும் என இலங்கையை புரட்டியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி. அங்கிருக்கும் சாமானிய மக்கள் தினம் அவதிக்குள்ளாவதைப் பற்றி பல காணொளியில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் குரலான இலங்கையில் வசிக்கும் நண்பர் பிரகாஷ் மூர்த்தியுடன் முகநூல் வழியாக பேட்டி கண்டதை இங்கு வெளியிடுகிறேன்.
கே: வணக்கம் பிரகாஷ்
ப: வணக்கம்
கே: இலங்கையில் எப்படி இருக்கு வாழ்க்கை
ப: இந்த நிமிடம் வரைக்கும் நிலமை சீராக கூடிய தகவல் இல்லை. தொலைநோக்கு பார்வையில் சிந்திக்க மறுக்கும் அரசியல்.