Thursday, November 11, 2021

குதிரை மரம் விமர்சனம்- தேவதாஸ்

 



தமிழில் மிக அதிகமான கதைகள் எழுதப்பட்ட காலம் கொரோனா தீ நுண்ணுயிரி தாக்கத்தால் பொது முடக்கமும், வீடடங்கும் அமலிலிருந்த காலம். இக் காலத்தில் எழுதப்பட்ட கதை வெள்ளத்தில் சில நல்ல கதைகளும் கவனிப்பாரின்றி அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் ஒன்று சொல்வனம் இதழ் 242ல் மார்ச் 14, 2021 அன்று வெளியான கே.ஜே. அசோக்குமாரின்  குதிரை மரம் குறுநாவல், அது குறித்தான ஒரு பார்வை இக்கட்டுரை.