Thursday, July 9, 2020

நீங்களும் உங்க சாதியும்

ஒரு விஷயம் பற்றி எழுதிவிட்டால், அதன் எதிர்வினைகள், அதற்கான பதில்கள், அதன் விவாதங்கள் செல்லும் திசையறிந்து அவற்றை பற்றி இறுதியாக, முடிவாக என்று பல கட்டுரைகளை எழுதி நிறைவு செய்கிறார் ஜெயமோகன். சமீபத்தில் ராஜன்குறை, ஜெயரஞ்சன், ஆனந்தி (எம்எஸ்எஸ் பாண்டியன்) 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை குறித்து எழுதியிருந்தார். இதற்கு முன்பே பலர் சுட்டியிருந்தாலும் கவனம் பெறவில்லை. இப்போது அவரே அந்த கட்டுரையின் அறவியல் குறித்து கவனம் பெறவைக்க பல வழிகளில் முயற்சிக்கிறார். அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இவ்வளவு விவரங்கள் செய்திகளை கொட்டிய பின்னும் பெரிய மாற்றத்தை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.