Thursday, December 3, 2020
மலைச்சாரலில் இளம் பூங்குயில்
ஒரு குடும்பத்தின் கதை (1975) என்கிற படத்தில் வரும் பாடல் இது. இதன் இசையமைப்பாளர் ரலீல் செளதிரி என நினைத்திருந்தேன், ஆனால் இசைத்தது சங்கர் கணேஷ். பாடலின் வரிகளை பார்க்கும்போது கனமாக எழுதும் கண்ணதாசன் என நினைப்போம், எழுதியவர் வாலி. பொதுவாக வாலி எளிமையாக எழுதுபவர். கேட்பவர்கள் புரியவேண்டும் என நினைப்பதாக பேட்டிகளில் சொல்லியவர், ஆனால் இந்த பாடலில் நிஜமாக மெனெக்கெட்டு நன்றாக எழுதியது போன்றிருக்கிறது. பாடலை பாடியவர் யேசுதாஸ், பின்னணி ஹம்மிங் சசிரேகா. சிறப்பான அவரது பாடல்களில் இருக்க வேண்டிய பாடல். நல்ல காட்சியமைப்பும், படம் வெற்றிபெறாததும் பாடல் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன். பாடல் ரசிகர்கள் ஒருமுறை கேட்டால் மீண்டும் நினைவில் வைத்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள் என நம்பதோன்றும் பாடல்.
Friday, October 30, 2020
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி - து. வெங்கடேஷ்
“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்” எப்படி? இதென்ன கயாஸ் தியரி? அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க.
மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த்தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க அரிதாகக் குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகு தான்,பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது.
Thursday, July 9, 2020
நீங்களும் உங்க சாதியும்
ஒரு விஷயம் பற்றி எழுதிவிட்டால், அதன் எதிர்வினைகள், அதற்கான பதில்கள், அதன் விவாதங்கள் செல்லும் திசையறிந்து அவற்றை பற்றி இறுதியாக, முடிவாக என்று பல கட்டுரைகளை எழுதி நிறைவு செய்கிறார் ஜெயமோகன். சமீபத்தில் ராஜன்குறை, ஜெயரஞ்சன், ஆனந்தி (எம்எஸ்எஸ் பாண்டியன்) 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை குறித்து எழுதியிருந்தார். இதற்கு முன்பே பலர் சுட்டியிருந்தாலும் கவனம் பெறவில்லை. இப்போது அவரே அந்த கட்டுரையின் அறவியல் குறித்து கவனம் பெறவைக்க பல வழிகளில் முயற்சிக்கிறார். அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இவ்வளவு விவரங்கள் செய்திகளை கொட்டிய பின்னும் பெரிய மாற்றத்தை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
Monday, June 1, 2020
பொய்யை உண்மைச் செய்தியாக்குவது
என்ன ஒரு கேவலமான சிந்தனை. பங்களாதேஷில் 2016ல் நடந்த ஒரு நிகழ்வை இந்தியாவில் நடந்ததாக கூறி மக்களை திசை திருப்பவது பத்திரிக்கை தர்மமா? இதன் ஆசிரியர் நடந்து செல்லும் அகதிகள் மேல் கவலை கொள்ளுங்கள் என்று அறிவுரை வேறு கூறுகிறார். நடந்து செல்லும் அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாத பங்களாதேஷி, ரோகிங்கீயாக்கள் என்கிறது ஒரு செய்தி.
Thursday, May 28, 2020
எம்.வி. வெங்கட்ராம் சிறப்பிதழ்: அடவி
எழுத்தாளர்கள் அவர்களின் மொத்த
படைப்புகளை வைத்து
கொண்டாடுவது எப்போதும் நிகழ்வதில்லை. அவரது
நூற்றாண்டில்கூட நிகழ்வது அபூர்வம்தான். எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு இந்த
ஆண்டுதான். மே
18ல்
நிறைவடைவதால் அடவி
இதழும்
மற்றும் சில
நண்பர்களின் முயற்சியாலும் அவரது
படைப்புகளை நினைவு
கூறும்
விதமாக
அடவி
இதழில்
ஒரு
சிறப்பிதழை கொண்டு வந்திருக்கிறார்கள். சிறப்பிதழ் எனும்போதே அதில்
அவரது
நினைவுகளை பகிரும் விதமான
கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.
Wednesday, May 20, 2020
எம்.வி. வெங்கட்ராமின் உயிரின் யாத்திரை
எல்லாம் புரியும்படியாக வாழ்க்கை தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கையின் விந்தைகளை சில விசித்திரங்களை சிலவற்றை நம் நனவிலி மனதால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். சில உண்மைகள் ஒளித்து வைக்கப்படுவதால் நினைவுமனதால் புரிந்துக் கொள்ளமுடியாமல் போகிறது. மர்மத்தின் நோக்கமே ஒளிதலில் தான் இருக்கிறது. நினைவு மனதுக்கும் நனவிலி மனதுக்குமாக ஒரு பயணமாக உயிரின் யாத்திரை இருக்கிறது. எம்.வி. வெங்கட்ராம் எழுதியிருக்கும் உயிரின் யாத்திரை எனும் சிறுநாவல் நனவிலி மனதின் பயணத்தை
சொல்லிவிடுகிறது.
Monday, May 18, 2020
எம்.வி. வெங்கட்ராம் 100 ஆண்டுகள்
"தமிழ்நாட்டில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வது ஒரு மானங்கெட்ட பிழைப்பு" என்று பேட்டியில் சொல்லியிருந்தார் சாகித்ய அகாதமி விருது பெற்ற எம்.வி. வெங்கட்ராம். முழுநேர எழுத்தாளனாவது இன்றுவரை
தமிழகத்தில் மானங்கெட்ட பிழைப்பாகத்தான் இருக்கிறது. முழுநேர எழுத்தாளன் என்பது ஒருவகையில்
லெளகீக வாழ்க்கையை கொண்டவர்களுக்கு தற்கொலை முயற்சிதான். எம்விவி அவர்கள் தன் 16வது
வயதிலிருந்தே மணிக்கொடியில் சிறுகதைகள் எழுத தொடங்கிவிட்டவர். 1948ல் தேனீ என்கிற பத்திரிக்கையையும்
நடத்த தொடங்கினார்.
Wednesday, May 13, 2020
சாமத்தில் முனகும் கதவு: சிறுகதை தொகுப்பு விமர்சனம் - நாகரத்தினம் கிருஷ்ணா
அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு
மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.
மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப்பட்டதோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில் “பசியாற வேட்டையாடுவதில் தவறில்லை” என போதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு (consciousness),
முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை (preconciousness), இறுதியாக
நனவிலி நிலை
(unconsciousness) என வகைப்படுத்துகின்றனர்.
எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.
Thursday, May 7, 2020
நந்தா என் நிலா
நந்தா என் நிலா (1977) என்ற படத்தில்
இடம்பெறும் பாடல் தமிழ் இசையுலகில் மிக பிரபல்யமானது. அப்பாடலை பாடிய எஸ்.பி.பி மேடையில்
அதை பாடமுடியாத பாடலாக இன்றும் இருக்கிறது. வி.தெக்ஷ்ணாமூர்த்தி அவர்களது இசை, பாடல் இரா. பழனிச்சாமி.
இசையமைப்பாளர் வி. தெக்ஷ்ணாமூர்த்தி
1950ல் இசையமைக்கவந்தவர். ஆனால் தமிழுலகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. மலையாள
படஉலகில் பெரும் இசையமைபாளாராக இருந்திருக்கிறார். எம்.எஸ்.வி இங்கு கோலோச்சியது மாதிரி,
தமிழனாக அங்கு வென்றிருக்கிறார். அங்கே என்றும் மறக்கமுடியா பல அருமையான பாடல்கள் இசையமைத்திருக்கிறார்.
1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் ஊதாப்பு கண் சிமிட்டுகிறது படத்தில்
இசையமைத்திருக்கிறார். 93 வயதில் 2013ல் சென்னையில் இறந்தார்.
Tuesday, May 5, 2020
சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்
தெருவில் ஓடும் ஒரு குழந்தை தடுக்கிவிழுந்தால்,
ஐயோ பார்த்துவரகூடாதா தம்பி என தூக்கிவிடும் அப்பாக்கள், தன் பிள்ளை விழும்போது சனியனே
பார்த்துவரமாட்டியா என போட்டு அடிப்பதை பார்க்கும்போது நிஜமாகவே அவர்களுக்கு பிள்ளைகள்
மீது பாசmaa அல்லது வெறுப்பா எதை எடுத்துக் கொள்வதா என குழப்பம் ஏற்படுகிறது. இதிலிருக்கும்
உளவியலை எளிதில் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.
Monday, May 4, 2020
அசோகமித்திரனின் எண்கள்
குழந்தை முதலில் பள்ளிக்கு சென்றதும் பெரிய வியப்பு கொள்வது எண்களையும் எழுத்துக்களையும் கண்டுதான். குறிப்பாக எண்களின் தொடர்ச்சியை காண்பதும் கூட்டுத்தொகையை கண்டடைவதும் அதற்கு மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. எல்லா பொருட்களையும் எண்ணிப் பார்க்கிறது. வீட்டில் இருக்கும் தூண்களின், கதவிலுள்ள கம்பிகளின், டப்பாவிலுள்ள பென்சில்களின் எண்ணிக்கையை கூட்டிக் கூட்டி மகிழ்கிறது.
Sunday, May 3, 2020
Saturday, May 2, 2020
Friday, May 1, 2020
குலதெய்வத்தின் மொழி: பேய்ச்சி - ம.நவீன்
ஒரு குடும்பம் உருக்கொள்வதற்கும் ஒரு சமூகம் உருவெடுக்கவும் பெண்ணின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு இனக்குழு தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு பெண்களின் பங்கு தேவையாக இருக்கிறது. கூடவே அதற்கு ஒரு கட்டமைப்பு தேவையாகவும் இருக்கிறது. அதன்மூலம் எழுதாத சட்டங்களாக சில நடைமுறைகளை மேற்கொள்கிறார்கள். அவை மீறமுடியாத அறமாக பாவிக்கிறார்கள். அதற்கு ஒரு தலைவன்/தலைவி உருவாகி அவர்கள் கடவுளர்களாக உருக்கொள்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)