Thursday, November 28, 2019

நாயனம் - ஆ.மாதவன் சிறுகதை வாசிப்பனுபவம்



சலிப்பில்லாத வாழ்க்கையில்லை. எவ்வளவுதான் உயர் எண்ணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு வந்தேவிடுகிறது. வேண்டாத பொருள் கைவிட்டு போகும்போது அதுகுறித்து கவலை கொள்வதில்லை, அது நம்மைவிட்டு செல்கிறதே என்கிற மகிழ்ச்சி உண்மையில் அடைவதில்லை. மாறாக சலிப்பை அடிநாக்கின் கசப்பைபோல உணர்கிறோம். இதுநாள்வரை பொறுத்திருந்ததின் பொருளின்மைதான் உண்மையில் அப்படியான சலிப்பு தோன்றுவதற்கு காரணம் என்றால் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

Monday, November 25, 2019

சாமத்தில் முனகும் கதவு விமர்சனம் - சுரேஷ் சுப்ரமணி


எழுத்தாள நண்பர் திரு. கே.ஜே.அசோக்குமார் அவர்கள் எழுதிய இத்தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் உயிர் எழுத்து, வார்த்தை போன்ற அச்சு இதழ்களிலும் சொல்வனம், மலைகள்.காம், ஜெயமோகன்.காம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் அவர்கள் இக்கதைகளை பல மாறுபட்ட களங்களில் எழுதியிருந்தாலும் அனைத்துமே மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களை, வேதனைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. அதற்கான மொழிநடை அவருக்கு சிறப்பாக கைவந்துள்ளது அவர் கதைகளை வாசிக்கும்போது தெரிகிறது. கதைகள் யதார்த்த வகை கதைகளாகவும் சில கதைகள் மாய யதார்த்த வகை கதைகளாகவும் அமைந்திருப்பது பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

Thursday, November 21, 2019

நெடுஞ்சாலை வாழ்க்கை - கா. பாலமுருகன்



நெடுஞ்சாலையில் பயணிப்பது அலாதியான இன்பம் நிறைந்தது. உடனடி இலக்குகள் நமக்கு இல்லை என்பது ஒரு ஆயாசத்தை ஏற்படுத்திவிடுகிறது. அன்றாட தினசரி வேலைகள் இல்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடி இருக்கலாம் இல்லையா? பெரிய சலிப்பு நிறைந்த தொடர் வேலைகளுக்கு பின் ஒரு நீண்ட பயணம் செல்வது மனதிற்கு அமைதியை அளிக்க கூடியதுதான். அதையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்வது.

Sunday, November 10, 2019

புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன் சிறுகதை வாசிப்பனுபவம்



புற்றில் உறையும் பாம்பு எதிர்ப்பாராத வேகத்தில் திருப்பி தாக்கும். புற்றிற்குள் இறங்கும் பாம்பு தலை உள்ளேயும் வால் வெளியேயும் இருப்பதனால் அதை எளிதில் பிடித்துவிடலாம் என நினைத்து வாலைப் பிடிக்கும் சமயத்தில் புற்று வாயில் அதன் ஒளிந்திருக்கும் தலையை வெளியே எடுத்து பிடிப்பவரை தாக்கும். உண்மையில் பாம்பு வளைந்து அந்த இடத்தில் நின்று காத்திருக்கும். பொதுவாக பெண்களை பாம்புகளுடன் ஒப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெண்கள் உண்மையில் வேறுவகையானவர்கள். ஆண்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் எதிர் திசையில் செயல்படக்கூடியது. காமமும் அதன் மீதான பார்வைகளும் இருவருக்கும் பொதுவானதுதான் என்றாலும், வெளிப்பாடுகளில் இருக்கும் வேறுபாடு இருவரைப் பற்றி முற்றிலும் எதிர் திசையில் யோசிக்க வைக்கிறது.