Sunday, September 30, 2018

உப்பு நாய்கள்: முதிரா நகரத்தின் கதை

மாற்றத்தை சொல்வதற்குதான் இருக்கிறது நாவல். ஒரு தெருவின் கதை, ஒரு பகுதியின் கதை, ஒரு மரத்தை பற்றிய கதை, ஒரு பெருநகரத்தின் கதை என்று ஒரு இடம் அல்லது இருப்பை சொல்லும் நாவல்கள் நமக்கு இருக்கின்றன. ஆனால் கூடவே அதன் காலத்தையும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. காலமும் இடமும் சேர்ந்து ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வதை நாவல்கள் பொதுவாக செய்து கொண்டிருக்கின்றன.
 
பள்ளிகொண்டபுரம் ஒரு நகரத்தின் வளர்ச்சியையும் அதன் வீழ்ச்சியையும் பேசுகிறது. புளியமரம் இருக்கும் ஒரு பகுதியையும் அந்த நகரத்தையும் பேசுகிறது புளியமரத்தின் கதை. ஒரு தெருவில் வாழும் குடும்பங்களின் கதை ரெனீஸ் அய்யர் தெரு. காவல் கோட்டம் மதுரை பற்றிய கதை என்றும் சொல்லலாம். விஷ்ணுபுரம், நெருங்குருதி எல்லாமே ஒரு நகரத்தின் ஒரு இருப்பிடத்தின் கதைதான்.

Friday, September 14, 2018

மதுரைக்கு வந்த சோதனை



சோழநாட்டு தலைநகரிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தைத் தாண்டி பாண்டிய நாட்டிற்கு பல்வேறு நதிகளைக் கடந்து காலடி வைக்க மூன்று நாட்களாவது ஆகும் பயணத்திற்கு சரியான கட்டுசோறு தேவையைதாண்டி திருடர் பயமும் இருந்திருக்கும் அப்போது. இன்று நடுவில் புதுக்கோட்டையில் ஒரு கடையில் மதியஉணவை முடித்துக்கொண்டு மதுரைக்கு செல்ல நான்கு மணிநேரம்தான் ஆகியது. 

பதினைந்து நாட்களுக்கு முன்னால்வரை பயணத்திற்கான திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஒருநாள் தினேஷ் தொலைபேசியில் மதுரை வரமுடியுமா என்றார். அவர் முன்பே வாசகசாலை தோழர்கள் கார்த்திகேயன், அருண் இருவரின் வழிகாட்டுதலால் என்னை தொடர்புகொண்டிருந்தார். உடனே தயார் படுத்திக்கொள்ள முடியுமா என்று சற்று தயக்கமாக இருந்தது. முன்னே லைப்ரரி புத்தகமாக படித்திருந்தாலும் புத்தகம் கிடைக்கட்டும் என்றேன். வாசகசாலை கண்ணம்மாள் அவர்கள் புத்தகம் இருக்கிறது என்று கையோடு வாங்கிக் கொடுத்துவிட்டார். ஆகவே மனம் கொள்ளும் விடுபடல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. சரி என்று சொல்லவேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்களும் நெடுங்குருதியும், லேட்டாப்புமாக இருந்தேன்.

Monday, September 10, 2018

கறிச்சோறு: நிறைவேறா வேண்டுதல்கள்


கடந்த ஐம்பதாண்டுகளில் தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு சாட்சியாக விளங்குபவர் சி.எம் முத்து என்று .முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது உண்மை என்றே படுகிறது. தி.ஜா. கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், குபாரா போன்றவர்கள் இசை, நடனம், போன்ற கலைகளின் உயர்குடிகளின் ரசனைக்கு ஏற்றவகையில் நாவல்கள் படைக்கப்பட்டபோது வயல்களில் மனித வாழ்க்கை, குடும்ப உறவுகளில் சிக்கல், சாதிய மனநிலை ஏற்றத்தாழ்வுகள், மிதமிஞ்சிய அன்பு, மிதமிஞ்சிய கோபதாபங்கள் என்று வாழ்வின் மிக அடித்தட்டில் இருக்கும் மக்களின் சுகதுக்கங்களை ரசனைகளின் மேல் பெரிய ஈடுபாடுமில்லாத வாழ்க்கையை பற்றி பேசுகிறார். எந்த பெரிய லட்சியங்கள், கொள்கைகள் இல்லாத மனிதர்கள் நேரடியாக மற்ற மனிதர்களை சார்ந்து வாழும் வாழ்வை, தன் இயல்பிற்கும் தன் சிந்தனைக்கும் மீறாத வாழ்வு கொடுக்கும் கரிசனத்தை எந்த கேள்விகளுமற்று எற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களை படைப்பதில் கடந்த 50 ஆண்டுகளாக சலிப்பின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார் சி.எம்.முத்து.

Monday, September 3, 2018

நெடுங்குருதி: வெக்கை நதியின் துயரம்



சொற்களற்ற தொடர்பு (nonverbal communication) என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை தொடர்புறுத்தல் முறை நம் உடல்வழியாக எப்போது வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம், அதை உடல்மொழிம் என்று சொல்லலாம். ஒருவரது நேரடி மற்றும் மறைமுக சைகைகளை அதன்மூலம் அவருக்கு தெரியாமல் நாம் படித்துவிடமுடியும். அவர் நமக்கு உணர்த்துவதை புரிந்துக் கொள்ளவும் அவரது பொதுஇயல்புகளைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். அந்த சொற்களற்ற தொடர்ப்பு அல்லது உடல்மொழியை நம் இலக்கியத்திலும் காணமுடியும். குறியீடுகளாக, படிமங்களாக இலக்கியத்தில் சொல்லப்படுபவைகளை மறைமுகமாக இந்த தன்மையைதான் உணர்த்துகின்றன என்று சொல்லலாம்.