மாற்றத்தை சொல்வதற்குதான் இருக்கிறது
நாவல். ஒரு தெருவின் கதை, ஒரு பகுதியின் கதை, ஒரு மரத்தை பற்றிய கதை, ஒரு பெருநகரத்தின்
கதை என்று ஒரு இடம் அல்லது இருப்பை சொல்லும் நாவல்கள் நமக்கு இருக்கின்றன. ஆனால் கூடவே
அதன் காலத்தையும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. காலமும் இடமும் சேர்ந்து ஒரு மாற்றத்தை
நோக்கி நகர்வதை நாவல்கள் பொதுவாக செய்து கொண்டிருக்கின்றன.
பள்ளிகொண்டபுரம் ஒரு நகரத்தின்
வளர்ச்சியையும் அதன் வீழ்ச்சியையும் பேசுகிறது. புளியமரம் இருக்கும் ஒரு பகுதியையும்
அந்த நகரத்தையும் பேசுகிறது புளியமரத்தின் கதை. ஒரு தெருவில் வாழும் குடும்பங்களின்
கதை ரெனீஸ் அய்யர் தெரு. காவல் கோட்டம் மதுரை பற்றிய கதை என்றும் சொல்லலாம். விஷ்ணுபுரம், நெருங்குருதி எல்லாமே
ஒரு நகரத்தின் ஒரு இருப்பிடத்தின் கதைதான்.