பெங்களூரு நகரம் முன்பு மதராஸ் மாகாணத்துடன் இருந்தது. அப்போது
இந்தியாவில் நான்கு பெரிய நகரங்கள் மட்டும்தான் இருந்தன, மும்பை, தில்லி, கல்கத்தா, சென்னை.
மொழிவாரி மாநிலங்களாக பிரிந்தபின்னும் இந்த நான்கு நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த
பெங்களுர், அகமதாபாத், ஹைதராபாத் போன்ற நகரங்கள் பெரியஅளவில்
வளர்ச்சி பெற்றோ அல்லது மக்கள் கூடும் இடமாக உடனே மாறிவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக இந்த மூன்று
நகரங்களும் தங்களுக்கேயுரிய தனித்தன்மையுடன் வளர்ச்சிபெற்று அந்ததந்த மாநிலத்தில் இருக்கும்
தொழில்களையும் வளர்ச்சி பெறச் செய்தன.
முன்னாலிருந்தே இருக்கும்
பெரிய நகரங்களான மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை நகரங்களும் வளர்ச்சி பெற்று
மக்கள் தொகையில், தொழில்வளர்ச்சியில், பிடிபி உயர்வில் என்று எல்லாவகையிலும் வளர்ச்சிபெற்று வந்தன.
ஆனால் இன்றைய தேதியில் பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புனே போன்ற நகரங்களின் வளர்ச்சி விகிதம் சென்னையைவிட அதிகம். முதல்
மூன்று நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்தாலும், சவலைப்
பிள்ளை போல் சென்னை அப்படி வளர்ச்சியடையவில்லை. அதற்கு நம் அரசியல் வாதிகள்தான் காரணம்
என நினைக்கிறேன்.