Monday, April 4, 2022

இலங்கை சாமானியரின் பதில்கள்


கரோனாவிற்கு பின்னான நெருக்கடி என்று ஒருபுறமும் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றொரு புறமும் என இலங்கையை புரட்டியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி. அங்கிருக்கும் சாமானிய மக்கள் தினம் அவதிக்குள்ளாவதைப் பற்றி பல காணொளியில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் குரலான இலங்கையில் வசிக்கும் நண்பர் பிரகாஷ் மூர்த்தியுடன் முகநூல் வழியாக பேட்டி கண்டதை இங்கு வெளியிடுகிறேன்.

கே: வணக்கம் பிரகாஷ்

ப‌: வணக்கம்

கே: இலங்கையில் எப்படி இருக்கு வாழ்க்கை

ப‌: இந்த நிமிடம் வரைக்கும் நிலமை சீராக கூடிய தகவல் இல்லை. தொலைநோக்கு பார்வையில் சிந்திக்க மறுக்கும் அரசியல்.

Saturday, April 2, 2022

ஆட்டிசம் என்னும் புதிர்

 

ஆட்சிசம் என்பது நோயல்ல, ஒரு குறைபாடு. வேறுவகையில் எப்படி சொன்னாலும் புரிந்துக் கொள்வது கடினம். மனங்களின் அரசன் மனிதன். மனதின் இண்டு இடுக்குகளில் இருக்கும் புரிதல்களை பல்வேறு கருவிகள் கொண்டு ஆராய்ந்தாலும் விடுபடல் இருக்கவேச் செய்கிறது. மனதை அறியமுடியாத ஒரு குறைபாட்டை எந்த பெயர்களில் அழைக்க விழைந்தாலும் அதற்கு ஒரு எல்லை வேண்டியிருக்கிறது. எல்லையற்ற வகையில் பலநூறு பிரிவுகளில் இருக்கும் ஒரு குறைபாட் டை ஆட்சிசம் ஸ்பெக்ரம் டிஸ்சாடர் (ASD) என்று பொதுமையில் அழைக்க வேண்டியிருக்கிறது.