நலமா அஷோக். உங்களின் குதிரை மரம் சொல்வனத்தில் வெளியானபோதே படித்து இருந்தேன். இப்பொழுது நூலகத்தில் இருந்து வெங்கட்ராம் அவர்கள் எழுதிய வேள்வித்தீ எடுத்து படித்தேன். அதுவும் பட்டு நூல்காரங்க என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் கதை. அதனால் மறுபடியும் குதிரை மரம் படித்தேன். பட்டு நெசவின் நுட்பங்கள், நூலிற்கு சாயம் ஏற்றுவது, கட்டைகளில் சுற்றுவது இவைகள் எல்லாம் சரியாய் புரியாமல் இருந்தாலும் இயல்பாய் வாசிக்க முடிந்தது. எல்லா துறைகளிலும் வேலையை வேலையாய் செய்யாமல் கலையாய் எண்ணிக் கொள்பவர்களுக்கு வரும் சிக்கல்கள்.
Thursday, March 24, 2022
Friday, March 18, 2022
குதிரை மரம் & பிற கதைகள் - சுரேஷ் சுப்பிரமணி
எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் பல இணைய இதழ்களில் கதைகள் எழுதி வருபவர். தஞ்சைவாசி. இவரின் முதல் தொகுப்பான 'சாமத்தில் முனகும் கதவு' அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிறப்பான தொகுப்பு. இந்நூல் இவரின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.
இதில்,
1. தற்கொலை முகம்.
2. மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்.
3. கருடனின் கைகள்.
4. ஓசைகள்.
5. கணக்கு.
6. புரியாதவர்கள்.
7. அலர்.
8. எஞ்சும் இருள்.
9. பாம்பு வேட்டை
என்ற ஒன்பது சிறுகதைகளும்,
10. குதிரை மரம்.
என்ற குறுநாவல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது
Wednesday, March 9, 2022
குதிரைமரம் – ஒரு நெசவு
நவீனக் கல்வியின் பலமாக நான் எண்ணுவது அது நமக்களிக்கும் ஒரு பொதுத்தன்மையை. குறிப்பாக, எந்த ஒன்றிலுமே ஆரம்பத்திலேயே பெரும் ஈடுபாட்டோடு தன்னையறியாமல் மூழ்கிப் போவதைத் தடுக்கிறது அல்லது தவிர்க்க வைக்கிறது. இதன் விழைவுதான் அந்த பொதுத் தன்மை என்றும் எண்ணுகிறேன். ஆற்றில் செல்லும் படகு அதன் சுழிக்குள் சிக்காமல் செல்வது போல. உயர் கல்வியின் போது நம் அகத்தின் ஒத்திசைவுக்கேற்ப ஏதாவது ஒரு சுழியில் நம்மை மூழ்கடித்து அதில் நிபுணத்துவம் பெறும் முதிர்ச்சியைத் தருவது, ஆரம்பகட்ட கல்வியில் கிடைத்த அந்த பொதுத்தன்மை தான் என்று நம்புகிறேன். இந்த முதிர்ச்சி தான் , ஆற்றின் ஆழத்தில் சலனமின்றி பயணிக்கும் ஒரு பக்குவத்தைத் தருகிறது.
Subscribe to:
Posts (Atom)