Wednesday, December 28, 2022

பனி இறுகிய காடு குறுநாவல் குறித்து பாவண்ணன்

 



அன்புள்ள அசோக்குமார் 

வணக்கம்.  முதல் பகுதி கதையை முழுதாகப் படித்தேன். நல்ல தொடக்கம். அவன் மனநிலை, அவன் தாயின் மனநிலை, அவன் மனைவியின் மனநிலை எல்லாமே தனித்துவத்துடன் அமைந்துள்ளன. அவனுடைய விசித்திரமான நடத்தைகளை சிறிதும் மிகை படியாத விதத்தில் எழுதியருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

இரண்டாம் பகுதிக் கதையையும் படித்து முடித்தேன். மனத்தை பனி இறுகிய காடாக உருவகித்து, அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தெளிவடைவதை கூர்மையாக சொல்லியிருக்கிறீர்கள். பழைய நினைவுகளை சின்னச்சின்ன சித்திரங்களாக இடையிடையே ஊடாடவிட்டு அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.  பொதுவாக தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்படும் சிறுவர்களின் மனநிலை அடையும் மாற்றங்கள் துல்லியமாக அமைந்துள்ளன. அப்பாவுவின் அணுகுமுறை, அவன் இறந்தகால வாழ்வின் தகவல்கள் எல்லாமே கதைமையத்துக்கு வலு சேர்க்கின்றன. முள்ளும் குப்பைகளுமாக அடர்ந்த இடம் சிறுகச்சிறுக சுத்தம் பெற்று தெய்வத்தைக் கண்டடையும் இடம் மொத்த கதையின் மைய்த்தையும் உருவகமாக முன்வைப்பதாக உள்ளது. கதை வாசிப்பு நல்ல அனுபவமாக இருந்தது. வாழ்த்துகள்


அன்புடன்
பாவண்ணன்

Sunday, November 27, 2022

பொம்மைகளின் உரையாடல் பற்றி கிறிஸ்டி

 



அன்புள்ள அஷோக் சார்,
 
பொம்மைகளின் உரையாடல்களிலிருந்து ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டில் எந்தளவு தெய்வ நம்பிக்கை ஊடுருவி உள்ளது என.  தெய்வ நம்பிக்கை கொண்டுதான் இந்த பூலோகவாசிகளை நல்வழிப்படுத்தமுடியும் என முன்னோர்கள் நினைத்ததால்தான் கடவுள் மதம்  என்கிற கலாச்சாரத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால் காலம் போகப்போக மனிதன் அந்த தெய்வ நம்பிக்கையைக்கொண்டே சக மனிதனை ஏமாற்றி தான் எவ்வாறு சுகித்திருப்பது எனக் கண்டுகொண்டான்.

Thursday, November 3, 2022

குதிரை மரம் பற்றி - ‍குமார நந்தன்


கே.ஜே. அசோக்குமாரின் குதிரை மரம் சிறுகதையை கடந்த சொற்சுனை கூட்டத்திற்காக சிவப்பிரசாத் தேர்ந்தெடுத்திருந்தார். 

படித்தவுடனே கதையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்ப நிலையால் முடியவில்லை. இப்போதுதான் எழுதுகிறேன்.
கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கதை, எழுத்தாளன் என்ற நிலைமைகளைத் தாண்டி இக்கதையை அவர் எழுதி இருக்கிறார் என எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கதையில் அவ்வளவு உயிரோட்டம்.
ஒரு நெசவாளியின் துயர் மிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்துவிட வேண்டும் என அர்ப்பணிப்புடன் எழுதி இருக்கிறார்.

Monday, April 4, 2022

இலங்கை சாமானியரின் பதில்கள்


கரோனாவிற்கு பின்னான நெருக்கடி என்று ஒருபுறமும் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றொரு புறமும் என இலங்கையை புரட்டியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி. அங்கிருக்கும் சாமானிய மக்கள் தினம் அவதிக்குள்ளாவதைப் பற்றி பல காணொளியில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் குரலான இலங்கையில் வசிக்கும் நண்பர் பிரகாஷ் மூர்த்தியுடன் முகநூல் வழியாக பேட்டி கண்டதை இங்கு வெளியிடுகிறேன்.

கே: வணக்கம் பிரகாஷ்

ப‌: வணக்கம்

கே: இலங்கையில் எப்படி இருக்கு வாழ்க்கை

ப‌: இந்த நிமிடம் வரைக்கும் நிலமை சீராக கூடிய தகவல் இல்லை. தொலைநோக்கு பார்வையில் சிந்திக்க மறுக்கும் அரசியல்.

Saturday, April 2, 2022

ஆட்டிசம் என்னும் புதிர்

 

ஆட்சிசம் என்பது நோயல்ல, ஒரு குறைபாடு. வேறுவகையில் எப்படி சொன்னாலும் புரிந்துக் கொள்வது கடினம். மனங்களின் அரசன் மனிதன். மனதின் இண்டு இடுக்குகளில் இருக்கும் புரிதல்களை பல்வேறு கருவிகள் கொண்டு ஆராய்ந்தாலும் விடுபடல் இருக்கவேச் செய்கிறது. மனதை அறியமுடியாத ஒரு குறைபாட்டை எந்த பெயர்களில் அழைக்க விழைந்தாலும் அதற்கு ஒரு எல்லை வேண்டியிருக்கிறது. எல்லையற்ற வகையில் பலநூறு பிரிவுகளில் இருக்கும் ஒரு குறைபாட் டை ஆட்சிசம் ஸ்பெக்ரம் டிஸ்சாடர் (ASD) என்று பொதுமையில் அழைக்க வேண்டியிருக்கிறது.

Thursday, March 24, 2022

தொழில் தெய்வம்

நலமா அஷோக். உங்களின் குதிரை மரம் சொல்வனத்தில் வெளியானபோதே படித்து இருந்தேன். இப்பொழுது நூலகத்தில் இருந்து வெங்கட்ராம் அவர்கள் எழுதிய வேள்வித்தீ எடுத்து படித்தேன். அதுவும் பட்டு நூல்காரங்க என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் கதை. அதனால் மறுபடியும் குதிரை மரம் படித்தேன். பட்டு நெசவின் நுட்பங்கள், நூலிற்கு சாயம் ஏற்றுவது, கட்டைகளில் சுற்றுவது இவைகள் எல்லாம் சரியாய் புரியாமல் இருந்தாலும் இயல்பாய் வாசிக்க முடிந்தது. எல்லா துறைகளிலும் வேலையை வேலையாய் செய்யாமல் கலையாய் எண்ணிக் கொள்பவர்களுக்கு வரும் சிக்கல்கள்.

Friday, March 18, 2022

குதிரை மரம் & பிற கதைகள் - சுரேஷ் சுப்பிரமணி


எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் பல இணைய இதழ்களில் கதைகள் எழுதி வருபவர். தஞ்சைவாசி. இவரின் முதல் தொகுப்பான 'சாமத்தில் முனகும் கதவு' அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிறப்பான தொகுப்பு. இந்நூல் இவரின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.

இதில்,

1. தற்கொலை முகம்.

2. மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்.

3. கருடனின் கைகள்.

4. ஓசைகள்.

5. கணக்கு.

6. புரியாதவர்கள்.

7. அலர்.

8. எஞ்சும் இருள்.

9. பாம்பு வேட்டை

என்ற ஒன்பது சிறுகதைகளும்,

10. குதிரை மரம்.

என்ற குறுநாவல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது

Wednesday, March 9, 2022

குதிரைமரம் – ஒரு நெசவு


 நவீனக் கல்வியின் பலமாக நான் எண்ணுவது அது நமக்களிக்கும் ஒரு பொதுத்தன்மையை. குறிப்பாக, எந்த ஒன்றிலுமே ஆரம்பத்திலேயே பெரும் ஈடுபாட்டோடு தன்னையறியாமல் மூழ்கிப் போவதைத் தடுக்கிறது அல்லது தவிர்க்க வைக்கிறது. இதன் விழைவுதான் அந்த பொதுத் தன்மை என்றும் எண்ணுகிறேன். ஆற்றில் செல்லும் படகு அதன் சுழிக்குள் சிக்காமல் செல்வது போலஉயர் கல்வியின் போது நம் அகத்தின் ஒத்திசைவுக்கேற்ப ஏதாவது ஒரு சுழியில் நம்மை மூழ்கடித்து அதில் நிபுணத்துவம் பெறும் முதிர்ச்சியைத் தருவது, ஆரம்பகட்ட கல்வியில் கிடைத்த அந்த பொதுத்தன்மை தான் என்று நம்புகிறேன். இந்த முதிர்ச்சி தான் , ஆற்றின் ஆழத்தில் சலனமின்றி பயணிக்கும் ஒரு பக்குவத்தைத் தருகிறது.

Wednesday, February 9, 2022

குதிரை மரம் & பிற கதைகள் விமர்சனம்: சரவணன் மாணிக்கவாசகம்

 


குதிரை மரம் - கே.ஜே. அசோக்குமார்:
 
ஆசிரியர் குறிப்பு:

கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவரும் இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. சாமத்தில் முனகும் கதவு என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. 

Saturday, January 1, 2022

முன்னுரை - குதிரைமரம் & பிற கதைகள்


நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவதும் சிறந்த மனப்பயிற்சியாக இருந்தது அப்போது. இந்தக் கதைகள் இனிய மனநிறைவோடு எழுதியவை என்றே நினைக்கிறேன். தொகுப்பிற்காக மீண்டும் வாசித்தபோது ஆழ்மனதை சென்றடைந்த அதே பரவசத்தை இப்போதும் உணர்ந்தேன். கதைகளை வேறுஒரு தளத்தில் நின்று பார்க்கும்போது நான் அடையும் பெருமிதம் மற்ற உலகியல் பெருமிதங்களுக்கு பலபடிகள் மேலானதாக இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்க இதைத்தான் காரணமாக சொல்லமுடியும்.