Thursday, December 3, 2020

மலைச்சாரலில் இளம் பூங்குயில்


 ஒரு குடும்பத்தின் கதை (1975) என்கிற படத்தில் வரும் பாடல் இது. இதன் இசையமைப்பாளர் ரலீல் செளதிரி என நினைத்திருந்தேன், ஆனால் இசைத்தது சங்கர் கணேஷ். பாடலின் வரிகளை பார்க்கும்போது கன‌மாக எழுதும் கண்ணதாசன் என நினைப்போம், எழுதியவர் வாலி. பொதுவாக வாலி எளிமையாக எழுதுபவர். கேட்பவர்கள் புரியவேண்டும் என நினைப்பதாக பேட்டிகளில் சொல்லியவர், ஆனால் இந்த பாடலில் நிஜமாக மெனெக்கெட்டு நன்றாக எழுதியது போன்றிருக்கிறது. பாடலை பாடியவர் யேசுதாஸ், பின்னணி ஹம்மிங் சசிரேகா. சிறப்பான அவரது பாடல்களில் இருக்க வேண்டிய பாடல். நல்ல காட்சியமைப்பும், படம் வெற்றிபெறாததும் பாடல் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன். பாடல் ரசிகர்கள் ஒருமுறை கேட்டால் மீண்டும் நினைவில் வைத்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள் என நம்பதோன்றும் பாடல்.