Thursday, May 28, 2020

எம்.வி. வெங்கட்ராம் சிறப்பிதழ்: அடவி



எழுத்தாளர்கள் அவர்களின் மொத்த படைப்புகளை வைத்து கொண்டாடுவது எப்போதும் நிகழ்வதில்லை. அவரது நூற்றாண்டில்கூட நிகழ்வது அபூர்வம்தான். எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு இந்த ஆண்டுதான். மே 18ல் நிறைவடைவதால் அடவி இதழும் மற்றும் சில நண்பர்களின் முயற்சியாலும் அவரது படைப்புகளை நினைவு கூறும் விதமாக அடவி இதழில் ஒரு சிறப்பிதழை கொண்டு வந்திருக்கிறார்கள். சிறப்பிதழ் எனும்போதே அதில் அவரது நினைவுகளை பகிரும் விதமான கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

Wednesday, May 20, 2020

எம்.வி. வெங்கட்ராமின் உயிரின் யாத்திரை



எல்லாம் புரியும்படியாக வாழ்க்கை தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கையின் விந்தைகளை சில விசித்திரங்களை சிலவற்றை நம் நனவிலி மனதால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். சில உண்மைகள் ஒளித்து வைக்கப்படுவதால் நினைவுமனதால் புரிந்துக் கொள்ளமுடியாமல் போகிறது. மர்மத்தின் நோக்கமே ஒளிதலில் தான் இருக்கிறது. நினைவு மனதுக்கும் நனவிலி மனதுக்குமாக ஒரு பயணமாக உயிரின் யாத்திரை இருக்கிறது. எம்.வி. வெங்கட்ராம் எழுதியிருக்கும் உயிரின் யாத்திரை எனும் சிறுநாவல் நனவிலி மனதின் பயணத்தை சொல்லிவிடுகிறது.

Monday, May 18, 2020

எம்.வி. வெங்கட்ராம் 100 ஆண்டுகள்


"தமிழ்நாட்டில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வது ஒரு மானங்கெட்ட பிழைப்பு" என்று பேட்டியில் சொல்லியிருந்தார் சாகித்ய அகாதமி விருது பெற்ற எம்.வி. வெங்கட்ராம். முழுநேர எழுத்தாளனாவது இன்றுவரை தமிழகத்தில் மானங்கெட்ட பிழைப்பாகத்தான் இருக்கிறது. முழுநேர எழுத்தாளன் என்பது ஒருவகையில் லெளகீக வாழ்க்கையை கொண்டவர்களுக்கு தற்கொலை முயற்சிதான். எம்விவி அவர்கள் தன் 16வது வயதிலிருந்தே மணிக்கொடியில் சிறுகதைகள் எழுத தொடங்கிவிட்டவர். 1948ல் தேனீ என்கிற பத்திரிக்கையையும் நடத்த தொடங்கினார்.

Wednesday, May 13, 2020

சாமத்தில் முனகும் கதவு: சிறுகதை தொகுப்பு விமர்சனம் - நாகரத்தினம் கிருஷ்ணா



. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு

மனம்
அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.
மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப்பட்டதோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில்பசியாற வேட்டையாடுவதில் தவறில்லைஎன போதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு (consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை (preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.

Thursday, May 7, 2020

நந்தா என் நிலா



நந்தா என் நிலா (1977) என்ற படத்தில் இடம்பெறும் பாடல் தமிழ் இசையுலகில் மிக பிரபல்யமானது. அப்பாடலை பாடிய எஸ்.பி.பி மேடையில் அதை பாடமுடியாத பாடலாக இன்றும் இருக்கிறது. வி.தெக்ஷ்ணாமூர்த்தி அவர்களது இசை, பாடல் இரா. பழனிச்சாமி.
இசையமைப்பாளர் வி. தெக்ஷ்ணாமூர்த்தி 1950ல் இசையமைக்கவந்தவர். ஆனால் தமிழுலகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. மலையாள படஉலகில் பெரும் இசையமைபாளாராக இருந்திருக்கிறார். எம்.எஸ்.வி இங்கு கோலோச்சியது மாதிரி, தமிழனாக அங்கு வென்றிருக்கிறார். அங்கே என்றும் மறக்கமுடியா பல அருமையான பாடல்கள் இசையமைத்திருக்கிறார். 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் ஊதாப்பு கண் சிமிட்டுகிறது படத்தில் இசையமைத்திருக்கிறார். 93 வயதில் 2013ல் சென்னையில் இறந்தார்.

Tuesday, May 5, 2020

சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்



தெருவில் ஓடும் ஒரு குழந்தை தடுக்கிவிழுந்தால், ஐயோ பார்த்துவரகூடாதா தம்பி என தூக்கிவிடும் அப்பாக்கள், தன் பிள்ளை விழும்போது சனியனே பார்த்துவரமாட்டியா என போட்டு அடிப்பதை பார்க்கும்போது நிஜமாகவே அவர்களுக்கு பிள்ளைகள் மீது பாசmaa அல்லது வெறுப்பா எதை எடுத்துக் கொள்வதா என குழப்பம் ஏற்படுகிறது. இதிலிருக்கும் உளவியலை எளிதில் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.

Monday, May 4, 2020

அசோகமித்திரனின் எண்கள்


குழந்தை முதலில் பள்ளிக்கு சென்றதும் பெரிய வியப்பு கொள்வது எண்களையும் எழுத்துக்களையும் கண்டுதான். குறிப்பாக எண்களின் தொடர்ச்சியை காண்பதும் கூட்டுத்தொகையை கண்டடைவதும் அதற்கு மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. எல்லா பொருட்களையும் எண்ணிப் பார்க்கிறது. வீட்டில் இருக்கும் தூண்களின், கதவிலுள்ள கம்பிகளின், டப்பாவிலுள்ள பென்சில்களின் எண்ணிக்கையை கூட்டிக் கூட்டி மகிழ்கிறது.

Sunday, May 3, 2020

புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை



புதுமைப்பித்தனின் சிறுகதைகளை சின்ன பேப்பரில் எழுதிவிடலாம் என்று தோன்றுமளவிற்கு சிறியவை. மிளகு சிறுத்தாலும் காரம் கொள்ளாது என்ற வகை (கடுகு முன்பே சொல்லிவிட்டோமே). சிறுகதைகள் பொதுவாக அரைமணியில் படித்துவிடவேண்டும் என ஒரு விதி உண்டு. ஆனால் புதுமைபித்தனின் கதைகள் 5 நிமிடங்கள் போதும்.

Saturday, May 2, 2020

மர்மம் நிறைந்த “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” - அ. முத்துலிங்கம்.



கல்கண்டு, கலைக்கதிர் மாதிரியான வியப்பு செய்திகளை பிரதானமாக கொண்ட நூலைப் போன்றது அ.முத்துலிங்கம் அவர்களது நூல்கள். அவர் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலில் தெரியும் சுவாரஸ்யம் கல்கண்டில் இருக்கும் வெறும் செய்தியைவிட பன்மடங்கு ஆழமும் விரிவும் கொண்டது.

Friday, May 1, 2020

குலதெய்வத்தின் மொழி: பேய்ச்சி - ம.நவீன்



ஒரு குடும்பம் உருக்கொள்வதற்கும் ஒரு சமூகம் உருவெடுக்கவும் பெண்ணின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு இனக்குழு தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு பெண்களின் பங்கு தேவையாக இருக்கிறது. கூடவே அதற்கு ஒரு கட்டமைப்பு தேவையாகவும் இருக்கிறது. அதன்மூலம் எழுதாத சட்டங்களாக சில நடைமுறைகளை மேற்கொள்கிறார்கள். அவை மீறமுடியாத அறமாக பாவிக்கிறார்கள். அதற்கு ஒரு தலைவன்/தலைவி உருவாகி அவர்கள் கடவுளர்களாக உருக்கொள்கிறார்கள்.